Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
"அப்பப்பப்பா போதும்ம்பா.. அன்னைக் காவிரி வேணும்ப்பா!" - விவசாயிகளுக்கு ஆதரவாக நடிகரின் கவிதை
Recommended Video
சென்னை : நடிகர் விவேக் தனது திரைப்படங்களில் சமூக கருத்துகளைக் கூறுபவர். நகைச்சுவையாக அவர் கூறும் வசனங்கள் பல சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. அரசியல், சமூகம், சாதி மறுப்பு பற்றிய இவரது நகைச்சுவைக் கருத்துகள் நல்ல வரவேற்பைப் பெற்றவை.
திரைப்படங்களில் நடிப்பது குறைந்ததை அடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது இதுபோன்ற கருத்துகளை பதிவிட்டு வருகிறார். காவிரி விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சியினரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில், விவேக் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
"நாங்கள் கேட்பது நீரப்பா!
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா!
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா..!"
நாங்கள் கேட்பது நீரப்பா!
— Vivekh actor (@Actor_Vivek) April 7, 2018
நீங்கள் தருவதோ சூரப்பா!
அண்ணன் தம்பிகள் நாமப்பா!
நம்மைப் பிரிப்பது நீராப்பா?
அப்பப்பப்பா போதும்ம்ம்ம்ம்பா!
அன்னைக் காவிரி வேணும்ப்பா. pic.twitter.com/ENNKfF05XY
இவ்வாறு காவிரி விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை நகைச்சுவையாக வெளியிட்டுள்ளார். அவரது கருத்துக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இன்னும் தொடர்ந்து குரல் கொடுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.