Don't Miss!
- News
கீமோ போர்ட்..புற்று நோயாளிகளுக்கு வலியில்லாத சிகிச்சை..மதுரை ராஜாஜி மருத்துவமனையில் வரப்பிரசாதம்
- Technology
இந்த மாசம் மட்டும் 15 போன் ரிலீஸ்.! இதுல லவ்வர்ஸ் டேக்கு February 14 எந்த போன் ரிலீஸ் தெரியுமா?
- Automobiles
ஹை ஸ்பீடில் ஓவர்டேக் செய்யக்கூடாதுனு சொல்றது இதுக்குதான்!! கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து...
- Lifestyle
செக்ஸ் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எவ்வளவு கலோரிகளை எரிக்கிறது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
- Finance
Adani Group: ரூ.9 லட்சம் கோடி இழப்பு.. RBI சொல்வது என்ன..?! முதலீட்டாளர்களே கவனிங்க..!
- Sports
இந்தியாவுக்கு உள்ள ஒரே ஒரு சிக்கல்.. ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி வீழ்த்துவது.. இர்ஃபான் பதான் பலே யோசனை!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விவேக் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...தமிழக அரசு உத்தரவு
சென்னை : நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 100 சதவீதம் இதய அடைப்பு இருந்துள்ளது. இருந்தும் தொடர்ந்து அவரக்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 4.30 மணியளவில் விவேக்கின் உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் அறிவித்தனர்.
Recommended Video

இந்நிலையில் மறைந்த விவேக்கிற்கு அரசு மரியாதை வழங்க தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டது தமிழக அரசு. முழு அரசு மரியாதையுடன் விவேக்கிற்கு இறுதி சடங்கு நடத்த தமிழக அரசு திட்டமிட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆணையத்திடம் அனுமதி கேட்டது தமிழக அரசு.
அரசு மரியாதையுடன் திரு. விவேக் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. pic.twitter.com/ttcVZJuZIR
— AIADMK (@AIADMKOfficial) April 17, 2021
தமிழக அரசின் கோரிக்கையை தேர்தல் கமிஷன் ஏற்றதை அடுத்து போலீஸ் மரியாதையுடன் விவேக் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், தமிழ் திரையுலகிலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்னக் கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ்சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ் பெற்றவரும், நேசிய அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு விருதுகளைப் பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும், சமூக சேவையாலும் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த திரு.விவேக் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றம் சமூகச் சேவையினை கெளரவிக்கும் விதமாகவும் அன்னாரின் இறுதி சடங்குகளின் போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.