Don't Miss!
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Lifestyle பளபளப்பான முகத்திற்கு தயிர்-எலுமிச்சை ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- News நாளை முதல் கட்ட லோக்சபா தேர்தல்:102 தொகுதிகளில் 2019-ல் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவு? முழு விவரம்!
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
நாசர் தலைமையில் முதல் நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம்.... சென்னையில் நடந்தது!
சென்னை: நடிகர் நாசர் தலைவராகப் பொறுப்பேற்றதற்குப் பின் முதன்முறையாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
பெரும் பரபரப்புகளுக்கிடையே கடந்த வாரம் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் நடைபெற்றது. இதில், சரத்குமார் அணியை வீழ்த்தி விஷால் தலைமையிலான அணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்திற்கு தலைவராக நாரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், நடிகர் சங்கத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக அச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. நாசர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில், நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை எப்போது கூட்டடுவது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது தொடர்பான பிரச்சினையால் தான் முன்னாள் தலைவர் சரத்குமார் அணியினருக்கும், விஷால் அணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.