பாவனாவை மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டே திட்டம் தீட்டிய திலீப்: பகீர் தகவல்
திருவனந்தபுரம்: நடிகை பாவனாவை கடத்தி மானபங்கப்படுத்த 2013ம் ஆண்டிலேயே நடிகர் திலீப் திட்டம் போட்டது தெரிய வந்துள்ளது.
பிரபல மலையாள நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி படப்பிடிப்பில் இருந்து வீட்டிற்கு சென்றபோது காரில் கடத்தப்பட்டு மானபங்கப்படுத்தப்பட்டார்.
அந்த கொடூர சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர்.

கைது
பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு நெருக்கமான பல்சர் சுனி உள்பட 7 பேரை கேரளா போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

திலீப்
பாவனா விஷயத்தில் பெரிய மீனுக்கு தொடர்பு உள்ளது என்று சுனி கூறி வந்தார். இந்நிலையில் திலீப்புக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அவரை நேற்று கைது செய்தனர்.

திட்டம்
பாவனாவை கடத்தி அசிங்கப்படுத்த திலீப் கடந்த 2013ம் ஆண்டிலேயே சதித் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. திட்டம் தீட்டி நான்கு ஆண்டுகள் கழித்து அதை ஆள் வைத்து செயல்படுத்தியுள்ளார்.

மகள்
நானும் ஒரு பெண்ணுக்கு தந்தை என்று டயலாக் பேசி வந்த திலீப் ஒரு பெண்ணை அசிங்கப்படுத்தியது அனைவரையும் கோபம் அடைய வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











