Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருமதியாகிறார் தாமிரபரணி பானு.. கொச்சியில் நிச்சயதார்த்தம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பானு என்கிற முக்தாவின் திருமண நிச்சயதார்த்தம், நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் எளிமையாக நடைபெற்றது.
தமிழில் தாமிரபரணி படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமான நடிகை பானு, தொடர்ந்து 3 பேர் 3 காதல் மற்றும் தேசிங்குராஜா போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை எனவே தாய் மொழியான மலையாளக் கரையோரம் சென்று அங்கெ தனது நடிப்பைத் தொடர்ந்தார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது மலையாள பின்னணி பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர்கள் இருவரும் இணைந்து பேசி பானு- ரிங்கு டோமியின் திருமணத்தை முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் பங்கேற்றனர்.
நடிகை பானு - ரிங்கு டோமிக் திருமணம் வருகிற 30-ந்தேதி கேரள மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறுகிறது. இதில் மலையாள பட உலகினர் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஓணம் முடிந்து அடுத்த 2 தினங்களில் திருமணம் நடக்கவிருப்பதால் இப்பொழுதே களை கட்டத் தொடங்கியிருக்கிறது பானுவின் திருமண ஏற்பாடுகள்.
பானு ரிங்குவைப் பார்த்த போது "இந்தப் பாடலை பாடியிருப்பாரோ வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னப் பார்த்தேனே அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே".