Don't Miss!
- News மோடி பேரணியின்போது மாணவர்கள் சீருடையுடன் நின்ற விவகாரம்.. பள்ளிக்கே சென்ற டீம்.. அதிரடி ஆக்ஷன்!
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
காலில் கட்டுடன் குஷ்பூ... என்னாச்சு என பதறிய ரசிகர்கள்... திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி
சென்னை: தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பூ.
ரஜினி, கமல், சரத்குமார், பிரபு உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்த குஷ்பூ, இயக்குநர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்
விஜய்யின் வாரிசு படத்தில் கூட குஷ்பூ நடித்திருந்தார், ஆனாலும் அவரது காட்சிகள் இடம்பெறாததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்நிலையில், குஷ்பூ தனது காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மோட்டிவேஷனாக போஸ்ட் போட, அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
வாரிசு க்ளைமாக்சில் நடித்துவிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.. விஜய் குறித்து பேசிய குஷ்பூ!
பயங்கர ஸ்லிம்மான குஷ்பூ
90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்த குஷ்பூ, சுந்தர் சியை திருமணம் செய்த பின்னர் சொந்த வாழ்க்கையில் செட்டில் ஆனார். அதன்பின்னர் அரசியல், சினிமா என இரு தளங்களிலும் மீண்டும் பரபரப்பாக இயங்கும் குஷ்பூ, சமீபத்தில் வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்திருந்தார். அதற்காக தனது உடல் எடையை குறைத்து செம்ம ஸ்லிம்மாக மாறியிருந்தார். இதனால் வாரிசு படத்தில் குஷ்பூவை ரசிக்கலாம் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டம்
இதனால் வாரிசு படத்தில் குஷ்பூ நடித்த காட்சிகள் ஏன் இடம்பெறவில்லை என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதனையடுத்து குஷ்பூவின் காட்சிகள் மட்டும் தனியாக வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் தனது மகளின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய குஷ்பூ, அந்த போட்டோக்களை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது குஷ்பூ காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை பதற வைத்துள்ளார்.
காலில் கட்டுடன் குஷ்பூ
குஷ்பூ தனது வலது காலின் மூட்டு பகுதியில் மிகப் பெரிய கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதேபோல் இரண்டு ட்ராலி சூட்கேஸ்களையும் பகிர்ந்து மோட்டிவேஷனாக கேப்ஷன் போட்டுள்ளார். அதில், "ஒரு விசித்திரமான விபத்து உங்களது அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்து வலியை கொடுக்கும் போது என்ன செய்வீர்கள்?. மற்றவர்களைப் பற்றி உறுதியாக தெரியவில்லை, ஆனால், எனது பயணம் தொடரும், சாதிக்கும் வரை நிறுத்தாதே!" என பதிவிட்டுள்ளார்.
தொடரும் பயணம்
மேலும் அதில் கோயம்புத்தூர் டூ டெல்லி டூ ஹைதராபாத் டூ துபாய் என தனது பயணத் திட்டங்களையும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் விபத்தில் காலில் கட்டுடன் இருந்தாலும் தனது பயணங்களை ரத்து செய்யவில்லை, தொடர்ந்து கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், துபாய் என பறந்துகொண்டே இருப்பதாக கூறியுள்ளார். முதலில் காலில் கட்டுடன் இருக்கும் குஷ்பூவின் போட்டோவை பார்த்து பதறிய ரசிகர்கள், பயணம் செய்யும் அளவிற்கு ஹெல்தியாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இதனிடையே குஷ்பூ விரைவில் குணமடைய வேண்டும் என திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.