Don't Miss!
- News மாலையில் திடீரென வாக்குச்சாவடியில் குவிந்த 1000 பேர்.. மரக்காணம் அருகே பரபரப்பு.. என்ன நடந்தது!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
டெல்லி பல்கலைக்கழகத் தாக்குதல்... 'இந்த அரசியலை ஏற்க முடியாது...' நடிகை மஞ்சுவாரியர் ஆவேசம்
கொச்சி: டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் நடந்த தாக்குதலுக்கு நடிகை மஞ்சுவாரியர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் நேற்று ஒரு கும்பல் நுழைந்தது. முகத்தை துணியால், மறைத்து இரும்பு கம்பிகள் மற்றும் கம்புகளுடன் நுழைந்த அந்தக் கும்பல் மாணவர்களை சரமாரியாகத் தாக்கியது.
விடுதியை அடித்து நொறுக்கிய அந்த கும்பல் வெறியாட்டம் நடத்தியது. இந்த தாக்குதலில் மாணவர் சஙகத் தலைவர் அயிஷ் கோஷ் மண்டை உடைந்தது. சுமார் 30 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
அதிர்ச்சி
மாணவர்கள், மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தீவிரவாத தாக்குதலை ஞாபகப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார், மகாராஷ்ட்ரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே.
ஹிட்லர் ஆட்சியில்
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் நடந்ததை போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்க தொடங்கியுள்ளதாக பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற இந்தியர் அபிஜித் தெரிவித்துள்ளார்.
மஞ்சு வாரியர்
இந்த தாக்குதலுக்கு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகை மஞ்சுவாரியரும் இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி பேஸ்புக்கில் அவர் கூறியிருப்பதாவது:
அதிர்ச்சி அடைந்தேன்
மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை டிவியில் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். பலரது முகத்தில் தெரிந்த ரத்தக்காயங்கள் வேதனையை தந்தன. நேரு பல்கலைக்கழகம், இந்திய அறிவின் சின்னம். அங்கு படித்தவர் பலர் இன்றும் நம்மை ஆட்சி செய்து கொண்டிருக் கிறார்கள்.
அரசியல் வேறானது
அவர்களின் அரசியல் வேறானது என்றாலும் அவர்களின் தேசப்பக்தி கேள்விக்கு உள்ளாக்கப் பட்டதில்லை. வேறுபாடுகள் இருந்தாலும் கலவரத்தை உருவாக்கியதில்லை.
ஏற்க முடியாது
ஆட்களை அழைத்துவந்து வன்முறையை கட்டவிழ்த்துவிடும்போது, அவர்கள் அரசியல் எதுவாக இருந்தாலும் அதை ஏற்க முடியாது. பல்கலையில் தங்கள் குழந்தைகளை படிக்க அனுப்பிய பெரும்பாலான தாய்மார்கள் சாதாரணமானவர்களே.
புறக்கணிக்க முடியாது
ரத்தக் கறை படிந்த மாணவர்களின் முகங்களை பார்க்கும்போது, அவர்கள் மனநிலை என்ன பாடுபடும்? அதனால் அவர்களை புறக்கணிக்க முடியாது. நானும் மாணவர்களோடு நிற்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.