Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விக்கியை விட அதிகம் பிடிக்கும்.. ஒரு மணி நேரம் குலுங்கி குலுங்கி அழுத நயன்.. யாருக்காகன்னு பாருங்க!
சென்னை: நடிகை நயன்தாரா தனது காதலரை விடவும் அதிகமாக விரும்பும் ஒரு நபரின் பிரிவுக்காக ஒரு மணி நேரம் அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா, நடிகர் ரஜினிகாந்துடன் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் வரும் 9 ஆம் தேதி வெளியாகிறது. தற்போது மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் கமிட்டாகியிருக்கும் நயன்தாரா, அதன் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.
கள்ள சிரிப்பழகி.. கவர்ச்சி பேரழகி.. சிரித்து சிரித்தே.. சிலிர்க்க வைக்கும் நீலிமா!
காதலருடன்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தென் மாவட்டங்களில் உள்ள கோவில்களில் எல்லாம் தனது காதலரான விக்னேஷ் சிவனுடன் சென்று வழிபட்டார் நடிகை நயன்தாரா.
அண்ணன் மகள்
இந்நிலையில் நடிகை நயன்தாரா குறித்த சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, நடிகை நயன்தாராவுக்கு அவருடைய அண்ணன் மகள் என்றால் உயிராம்.
ஏஞ்சலினா பிறந்தபிறகு
தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் சந்தோஷமான விஷயம் என்றால் தனது அண்ணன் மகள் பிறந்ததுதான் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஏஞ்சலினா பிறந்த பிறகுதான் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்து சந்தோஷமான சம்பவங்கள் நடந்ததாகவும் கூறியுள்ளார்.
கதறி அழுதார்
ஏஞ்சலினா, கிறிஸ்துமஸ் பண்டிகையயை கொண்டாட துபாய் சென்றதாகவும், அவர் பிரிவை தாங்க முடியாமல் அவருக்கு ஒரு மணி நேரம் கதறி அழுததாகவும் தெரிவித்திருக்கிறார்.
அதிகப் பாசம்
யார் சமாதானம் செய்தும் கேட்காமல் அழுது கொண்டிருந்தாராம் நயன்தாரா. இதனைக் கேட்ட ரசிகர்கள் விக்கி மேல வச்சுருக்கறத விட ஏஞ்சலினா மேல ரொம்ப அதிகப் பாசம் போல என தெரிவித்து வருகிறார்கள்.