Don't Miss!
- News
தமிழ்நாட்டில் 74 லட்சம் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது: மத்திய அரசு
- Technology
அட்டகாசமான வடிவமைப்புடன் இந்தியாவில் களமிறங்கும் கோகோ கோலா போன்: அறிமுகம் தேதி இதுதான்.!
- Lifestyle
Today Rasi Palan 03 February 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கவனக்குறைவே பெரும் சிக்கலை உண்டாக்கக்கூடும்...
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காதல்னா இப்படி இருக்கணும்..பீச் ஓரத்தில் புது வீடு..பிரியா பவானி சங்கரின் இன்ஸ்டா போஸ்ட்!
சென்னை : நடிகை பிரியா பாவனி சங்கர், தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார்.
சினிமா என்னும் மாய உலகில் ஜொலிப்பதற்கு லக் மிகவும் முக்கியமான ஒன்றாகும். என்னதான் அழகும், திறமையும், நடிப்பின் மீது ஆர்வமும் இருந்தாலும் லக் என்று ஒன்று இல்லை என்றால், சினிமாவில் ஜெயிக்க முடியாது.
அப்படி தனக்கு கிடைத்த அதிர்ஷ்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டவர் தான் பிரியா பவானி சங்கர்.
பாத்டப்பில்
கும்முனு
படுத்துக்கிடக்கும்
பிரியா
பவானிசங்கர்..கொஞ்சம்
கூட
செட்டாகல..இதுக்கு
இதெல்லாம்!

பிரியா பவானி சங்கர்
சின்ன திரையில் செய்தி வாசிப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருந்த போதே இணையத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருந்தார். இதில்கிடைத்த வரவேற்பை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்து பிரபலமானார்.

ஏராளமான படங்கள்
இதையடுத்து வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்த பிரியா பாவனி சங்கர், சீனியர் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். தற்போது இவர் கைவசம் அகிலன், ருத்ரன், பொம்மை, பத்துதல, இந்தியன் 2 போன்ற படங்கள் உள்ளன. இது மட்டும் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகி உள்ளார்.

தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸ்
தமிழ் சினிமாவின் ராசியான நடிகை என பெயர் எடுத்த பிரியா பாவனி சங்கரை பல தயாரிப்பாளர்களுக்கும் பிடித்து விட்டதாம். ஏராளமான படங்களை கையில் வைத்திருக்கும் போதும் சம்பளத்தை ஏகத்திற்கும் உயர்த்தாமல், தயாரிப்பாளர் தரும் சம்பளத்திற்கு , பேரம் பேசாமல் புன் சிரிப்போடு வாங்கிக் கொள்வதால், பிரியா பவானி சங்கர் பல தயாரிப்பாளர்களின் முதல் சாய்ஸாக உள்ளார்.

கனவு நினைவானது
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியா, தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்து மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பதவில்,18 வயது இருக்கும் பொழுது நாங்கள் கடற்கரைக்குச் சென்று, சந்திரனைப் பார்த்துக்கொண்டு, இங்கே ஒரு வீடு வேண்டும் என்ற கனவில் எங்களின் மாலைப் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தோம்.

பீச் ஓரத்தில் புது வீடு
தற்போது அந்தக் கனவு நினைவாகி உள்ளது, நாங்கள் எங்கள் புதிய வீட்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்தப் பதிவும், புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்கள் இந்த காதல்ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.