3வது முறையாக தாயான ரம்பா.. என்ன குழந்தை தெரியுமா?
ரம்பாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
Recommended Video

சென்னை: நடிகை ரம்பாவிற்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
ரஜினி, கமல், விஜய் என தமிழின் முன்னணி நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை ரம்பா. இந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இவர், சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகினார்.

ரம்பா - இந்திரன் தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், சமீபத்தில் அவர் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆனார். அவருடைய வளைகாப்பு படங்கள் இணையத்தில் வைரலாகின. பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவுடன் வளைகாப்பில் அவர் நடனம் ஆடிய வீடியோவும் இணையத்தில் பரவியது.
இந்நிலையில், தற்போது ரம்பாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை ரம்பாவின் சமூகவலைதளப் பக்கம் மூலம் அவரது கணவர் இந்திரன், ரசிகர்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார். கடந்த 23ம் தேதி டொரோண்டோ மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாகவும், தற்போது தாய் சேய் இருவரும் நலம் என்றும் அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சில காலம் அவரைப் பிரிந்து வாழ்ந்த ரம்பா, தற்போது நீதிமன்ற உதவியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











