Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சுற்றுலா சென்ற இடத்தில் நடிகையிடம் ரூ. 60,000 கொள்ளை
இஸ்தான்புல்: இந்தி தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சவும்யா டான்டனிடம் இருந்து ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இஸ்தான்புல்லில் திருடப்பட்டுள்ளது.
பாபி ஜி கர் பர் ஹை இந்தி தொலைக்காட்சி தொடரில் அனிதா பாபியாக நடித்து வருபவர் சவும்யா டான்டன். அவர் கடந்த வாரம் துருக்கிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
இன்ப சுற்றுலா துன்ப சுற்றுலாவாகிவிட்டது.

டாக்சி
இஸ்தான்புல்லில் சவும்யா டாக்சியில் தனியாக சென்றுள்ளார். டாக்சி டிரைவர் மீட்டர் போடாமல் வண்டியை ஓட்டியுள்ளார். திடீர் என்று வாகனத்தை நிறுத்திவிட்டு அவர் சவுமியாவிடம் பணம் கேட்டுள்ளார்.

யூரோ
சவுமியா தனது பர்ஸை எடுத்து யூரோ பணத்தை அளிக்க டிரைவரோ துருக்கி நாட்டு பணமான லிரா தான் செல்லும் என்று தெரிவித்துள்ளார். உண்மையில் துருக்கியில் யூரோ செல்லும்.

கூச்சல்
சவுமியா பர்ஸை எடுத்து பணம் எடுத்தபோது டாக்சி டிரைவர் திடீர் என்று கூச்சலிட்டதால் அவர் பயந்துள்ளார். அந்த சந்தர்பத்தை பயன்படுத்தி டிரைவர் சவுமியாவின் பர்ஸில் இருந்து ரூ. 60 ஆயிரத்தை திருடிவிட்டார்.

போலீஸ்
பயணச் சீட்டு இல்லாததால் போலீசாரால் அந்த டாக்சியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால் சவுமியா அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறராவது சூதானமாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.