Don't Miss!
- News சென்னையை அதிர வைத்த போலி நகையை அடகு வைக்கும் கும்பல்.. காரைக்குடியில் மொத்தமாக சிக்கியது எப்படி?
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சில்மிஷம்.. கேரள காங். எம்.பி மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார் ஸ்வேதா மேனன்
கொல்லம்: கேரளாவைச் சேர்ந்த 73 வயதான காங்கிரஸ் எம்.பி. பீதாம்பர குருப்பு தன்னிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்வேதா மேனன் தற்போது திடீரென பல்டி அடித்துள்ளார். பீதாம்பர குருப்பு மீது கொடுத்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளார்.
ஸ்வேதாவின் புகாரின்பேரில் குருப்பு மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்த சில மணி நேரங்களில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் ஸ்வேதா.
முன்னதாக, குருப்பு தன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால், இந்த முடிவுக்கு தான் வந்திருப்பதாகவும் ஸ்வேதா கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை...
மன்னிப்பு கேட்டு விட்டார்
பீதாம்பர குருப்பு பகிரங்கமாகவும், என்னிடம் தனிப்பட்ட முறையிலும் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார். நடந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.
வழக்கைத் திரும்பப் பெறுகிறேன்
எனவே அவருக்கு எதிரான அத்தனை சட்டரீதியான நடவடிக்கைகளையும் நான் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ஸ்வேதா.
மேனனிடமிருந்து வரவில்லை- போலீஸ்
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, மேனனிடமிருந்து அப்படி எந்த அறிக்கையும், கோரிக்கையும் எங்களுக்கு வரவில்லை என்றனர். ஆனால், இன்று காலை புகாரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுக்கப் போவதாக ஸ்வேதாவின் கணவர் கூறியுள்ளார்.
படகுப் போட்டியின்போது
கொல்லத்தில் நவம்பர் 1ம் தேதி நடந்த படகுப் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஸ்வேதாவிடம் கையை உரசியம், தொட்டும் சில்மிஷம் செய்தார் குருப்பு என்பது ஸ்வேதாவின் புகார். அதன் பேரில் போலீஸார் நேற்று வாக்குமூலம் பெற்று வழக்குப் பதிவு செய்தனர்.
புகார் வாபஸ்
இந்த நிலையில் கொல்லம் காவல் நிலையத்தில் ஸ்வேதா மேனன் கொடுத்திருந்த புகாரை அவர் திரும்பப் பெற்றுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!