Don't Miss!
- News அமவுண்டை பாதியாக குறைத்த மா.செ.க்கள்..பாதியில் பறந்த ஏஜெண்ட்கள்! என்ன இது இரட்டை இலைக்கு வந்த சோதனை?
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Finance ப்ளே ஸ்கூல் பையனுக்கு ரூ. 4,30,000 கட்டணமா.. ட்ரெண்ட் ஆகும் தந்தையின் கதறல் போஸ்ட்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ரஜினிக்கு சினிமான்னா என்னன்னே தெரியாது.. பாலச்சந்தர்தான் கற்றுக்கொடுத்தார்.. சொல்கிறார் சுகாசினி!
Recommended Video
சென்னை: சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் வந்த ரஜினிகாந்துக்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது கே பாலச்சந்தர்தான் என நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 89வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனம் சார்பில் பாலச்சந்தரின் 89வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் நடிகர்கள் பார்த்திபன், ரஹ்மான், நடிகை சுகாசினி, இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர் தேவதை இல்லை ஆன்ட்டி, லவ் வேண்டாம் தர்ஷன்: எச்சரிக்கும் ரசிகர்கள்
முதல் ஷூட்டிங்
நிகழ்ச்சியில் பேசிய சுகாசினி, இயக்குநர் பாலச்சந்தர் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் முதன் முதலில் பார்த்த சினிமா ஷூட்டிங் மூன்று முடிச்சுதான்.
ரஜினி யாரிடமும் பேசமாட்டார்
மூன்று முடிச்சு படத்தில் துணி துவைக்கும் காட்சி ஒன்று வரும் அது எங்கள் வீட்டின் பின்புறம்தான் எடுத்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போதெல்லாம் ரஜினி யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார்.
ரொம்ப பயப்படுவார்
சினிமாவுக்கு புதிது என்பதால் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அப்போது பாலச்சந்ரை பார்த்து ரஜினிகாந்த் ரொம்பவே பயப்படுவார்.
லுக் வைப்பது கஷ்டம்
படப்பிடிப்பு பிரேக்கின் போது எங்கள் வீட்டின் கதவு பக்கமாக நின்று ரஜினிகாந்த் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார். ரஜினி சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு கேமரா லுக் வைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.
பாலச்சந்தர்தான் கல்லூரி
மேல பார் என்றால் கீழே பார்ப்பார், கீழே பார் என்றால் மேலே பார்ப்பார். சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிகாந்த் மட்டுமின்றி பலருக்கும் நடிப்பு பயிலும் கல்லூரியாக இருந்தது இயக்குநர் கே.பாலச்சந்தரும் அவரது கலாகேந்திராவும்தான். இவ்வாறு சுகாசினி தெரிவித்தார்.