Just In
- 6 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 6 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 8 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 9 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா... இந்திய நேரப்படி இன்றிரவு 10 மணிக்கு நேரடி ஒளிபரப்பு..!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரஜினிக்கு சினிமான்னா என்னன்னே தெரியாது.. பாலச்சந்தர்தான் கற்றுக்கொடுத்தார்.. சொல்கிறார் சுகாசினி!
சென்னை: சினிமா என்றால் என்னவென்றே தெரியாமல் வந்த ரஜினிகாந்துக்கு சினிமாவை கற்றுக்கொடுத்தது கே பாலச்சந்தர்தான் என நடிகை சுகாசினி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தர் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி காலாமானார். அவரது 89வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
இதனை முன்னிட்டு பாலச்சந்தரின் மகளான புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனம் சார்பில் பாலச்சந்தரின் 89வது பிறந்தநாள் விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் நடிகர்கள் பார்த்திபன், ரஹ்மான், நடிகை சுகாசினி, இயக்குநர் வசந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர் தேவதை இல்லை ஆன்ட்டி, லவ் வேண்டாம் தர்ஷன்: எச்சரிக்கும் ரசிகர்கள்

முதல் ஷூட்டிங்
நிகழ்ச்சியில் பேசிய சுகாசினி, இயக்குநர் பாலச்சந்தர் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் பல்வேறு சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, நான் முதன் முதலில் பார்த்த சினிமா ஷூட்டிங் மூன்று முடிச்சுதான்.

ரஜினி யாரிடமும் பேசமாட்டார்
மூன்று முடிச்சு படத்தில் துணி துவைக்கும் காட்சி ஒன்று வரும் அது எங்கள் வீட்டின் பின்புறம்தான் எடுத்தார்கள். அந்த படத்தின் ஷூட்டிங்கின் போதெல்லாம் ரஜினி யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார்.

ரொம்ப பயப்படுவார்
சினிமாவுக்கு புதிது என்பதால் ரஜினிகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் பேசாமல் இருந்தார். அப்போது பாலச்சந்ரை பார்த்து ரஜினிகாந்த் ரொம்பவே பயப்படுவார்.

லுக் வைப்பது கஷ்டம்
படப்பிடிப்பு பிரேக்கின் போது எங்கள் வீட்டின் கதவு பக்கமாக நின்று ரஜினிகாந்த் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பார். ரஜினி சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு கேமரா லுக் வைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது.

பாலச்சந்தர்தான் கல்லூரி
மேல பார் என்றால் கீழே பார்ப்பார், கீழே பார் என்றால் மேலே பார்ப்பார். சினிமா குறித்து எதுவுமே தெரியாமல் வந்த ரஜினிகாந்த் மட்டுமின்றி பலருக்கும் நடிப்பு பயிலும் கல்லூரியாக இருந்தது இயக்குநர் கே.பாலச்சந்தரும் அவரது கலாகேந்திராவும்தான். இவ்வாறு சுகாசினி தெரிவித்தார்.