Just In
- 7 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 8 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் கடத்தினேனா?: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி போலீசில் புகார்
சென்னை: நடிகர் அபி சரவணன் மீது நடிகை அதிதி மேனன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் புகார் அளித்துள்ளார்.
கேரள நாட்டிளம் பெண்களுடனே உள்ளிட்ட சில படங்களில் நடித்த அபி சரவணனும், பட்டதாரி படத்தில் நடித்த அதிதி மேனனும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், பின்னர் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் அபி சரவணனை சிலர் காரில் கடத்திவிட்டதாக அவரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தன்னை யாரும் கடத்தவில்லை என்று கூறியுள்ளார் வீடு திரும்பியுள்ள அபி சரவணன்.
சினிமாவில் சாதிக்க என்ன தேவை?: கல்லூரி மாணவர்களிடம் ரகசியம் சொன்ன அமீர்

போலீஸ்
அபி சரவணனை அதிதி மேனன் ஆள் வைத்து கடத்தியதாக பேச்சு எழுந்தது. இந்நிலையில் அதிதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்துள்ளார். புகார் மனுவை அளித்துவிட்டு அதிதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

கடத்தல்
அபி சரவணன் என்கிற சரவணகுமார் என் கணவர் இல்லை. அவரை நான் கடத்தவில்லை. ஒரு படத்தில் சேர்ந்து நடித்தபோது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் அவரை பிரிந்துவிட்டேன் என்றார் அதிதி.

புகார்
அபி சரவணன் என்னை பற்றி அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டது போன்று போலி ஆவணங்களை தயார் செய்திருக்கிறார். நான் அவரின் மனைவி என்று சமூக வலைதளங்களிலும் பொய்யாக தெரிவித்துள்ளார் என்று அதிதி தெரிவித்தார்.

அதிதி
ட்விட்டர் உள்ளிட்ட என் சமூக வலைதள கணக்குகள் கடந்த மாதம் ஹேக் செய்யப்பட்டன. என் தனிப்பட்ட தகவல்கள் கசிந்துள்ளன. இதையடுத்தே அபி சரவணன் மீது போலீசில் புகார் அளிப்பது என்று முடிவு செய்தேன். எங்களுக்கு திருமணம் நடந்தது போன்று போலி ஆவணத்தை தயாரித்ததற்காகவும், என் சகோதரியை தாக்கியதற்காகவும் அவர் மீது புகார் அளித்துள்ளேன் என்று அதிதி கூறினார்.