Don't Miss!
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- News சோகத்தில் முடிந்த ஈஸ்டர் பயணம்.. பஸ் விபத்தில் 45 பேர் உடல் கருகி பலி! 8 வயது சிறுமி படுகாயம்
- Technology இனி கேபிள் டிவி கனெக்ஷன் எதுக்கு? சிங்கிள் பேமண்ட்.. வெறும் ரூ.199 தான்.. 400 TV சேனல்கள்.. 13 OTT தளங்கள்!
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வளையோசை கலகலவென... கமலுடன் மீண்டும் இணையும் அமலா
சென்னை: 26 வருடங்களுக்குப் பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார் நாகர்ஜுனாவின் மனைவியும், நடிகையுமான அமலா.
டி.ராஜேந்தரின் மைதிலி என்னைக் காதலி படத்தின் மூலம் தமிழில் 1986ம் ஆண்டு நாயகியாக அறிமுகமானவர் அமலா. தொடர்ந்து மெல்லத் திறந்தது கதவு, வேலைக்காரன், அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனியிடத்தைப் பிடித்தார்.
ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், மோகன் என்று அப்போது உள்ள டாப் நடிகர்களுடன் இணைந்து பல்வேறு வெற்றிப் படங்களைக் கொடுத்த அமலா 1992 ம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை மணந்து கொண்டார்.
தற்போது அமலாவின் மகன் அகில் அக்கினி நடிகராக தெலுங்கு சினிமாவின் மூலம் அறிமுகமாகிறார். இதே போன்று 24 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருகிறார் அமலா.
26 வருடங்களுக்குப் பின்னர் கமலுடன், அமலா நடிக்கவிருக்கும் இப்படத்தை பிரபல மலையாள இயக்குநர் டி.கே.ராஜீவ் குமார் இயக்குகிறார்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பானது ஜனவரி மாதத்தில் தொடங்குகிறது மேலும் மொத்தப்படத்தையும் 3 மாதங்களில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனராம்.
முழுப்படத்தையும் அமெரிக்காவில் எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகையிடமும் இப்படத்தில் நடிப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.