Don't Miss!
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வலிமையை தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார்...எதுக்கு தெரியுமா?
சென்னை : அஜித் நடித்த வலிமை படத்தை தொடர்ந்து, சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிராகவும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டாப் ஸ்டார்களின் படங்களுக்கு எதிராக அடுத்தடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படம் பல தடைகள், எதிர்ப்புகளை தாண்டி மார்ச் 10 ம் தேதி தியேட்டர்களில் ரிலீசானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் பாண்டிராஜ் இயக்கிய இந்த படம் ரசிகர்களிடம், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.
Etharkkum Thunindhavan Box Office Collection Day 2: எதற்கும் துணிந்தவன் 2வது நாள் வசூல் எவ்வளவு?
எதிர்ப்பை சந்தித்த எதற்கும் துணிந்தவன்
எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாவதற்கு முன்பே ஜெய்பீம் விவகாரம் மீண்டும் தலைதூக்கி, பிரச்சனை எழுந்தது. இதனால் சூர்யாவின் வீடு, எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்ட தியேட்டர் என பலவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது. எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாவதற்கு முன்பே ஜெய்பீம் விவகாரம் மீண்டும் தலைதூக்கி, பிரச்சனை எழுந்தது. இதனால் சூர்யாவின் வீடு, எதற்கும் துணிந்தவன் திரையிடப்பட்ட தியேட்டர் என பலவற்றிற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அந்த பிரச்சனை ஒரு புறம் ஓடிக் கொண்டிருக்கையில், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று வந்துள்ளது.
எதற்கு போலீஸ் புகார்
எதற்கும் துணிந்தவன் படக்குழுவிற்கு எதிராக அனைத்திந்திய நேதாஜி கட்சி சார்பில் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரில், படத்தில் வரும் உள்ளம் உருகுதய்யா பாடல் தமிழ் கடவுளான முருகப் பெருமானை அவமதிக்கும் விதமாக உள்ளது. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
படக்குழுவிற்கு வந்த சிக்கல்
இது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறுகையில், இந்த பாடல் பல வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் பாடலில் மட்டுமின்றி பல காட்சிகளிலும் முருகப் பெருமானை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதோடு நடிகர் சூர்யா, டைரக்டர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி அது பக்தி பாடல் என தெரிந்தும் அதை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அந்த கட்சியின் நிறுவனர் ராகுல் காந்தி கூறுகையில், இந்த பாடல் பல வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு விட்டது. ஆனால் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ள படத்தில் பாடலில் மட்டுமின்றி பல காட்சிகளிலும் முருகப் பெருமானை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அந்த பாடலை உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றார். அதோடு நடிகர் சூர்யா, டைரக்டர் பாண்டிராஜ், இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி அது பக்தி பாடல் என தெரிந்தும் அதை தவறாக பயன்படுத்தியதற்காக அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
கோர்ட் வரை போன வலிமை
சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை படத்திலும் வழக்கறிஞர்களை தவறாக சித்தரிப்பதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தனர். வழக்கறிஞர் சங்கம் சார்பிலும் போலீஸ் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வலிமை படத்தின் டைரக்டர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.