Don't Miss!
- News 2 பூட்டுக்கள்.. அடுத்த 45 நாட்கள்.. வாக்குப்பதிவு எந்திரங்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதோ விவரம்
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மீண்டும் நிறுத்தப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் லைவ் ஸ்ட்ரீமிங்...இப்போ என்ன பிரச்சனை தெரியுமா ?
சென்னை : தொழில்நுட்ப காரணங்களால் பிக்பாஸ் அல்டிமேட் லைவ் ஸ்ட்ரீமிங் பிப்ரவரி 4 ம் தேதி காலை திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் லைவ் ஸ்ட்ரீமிங் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை கேட்டு ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
Recommended Video
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேர லைவ் நிகழ்ச்சியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. பிக்பாஸ் டிவி வெர்சனில் ஒரு மணி நேர நிகழ்ச்சியாக மட்டும் பிக்பாஸ் ஒளிபரப்பு செய்யப்பட்டதால் போட்டியாளர்கள் பற்றி தங்களுக்கு சரியாக தெரியவில்லை என ரசிகர்கள் கேட்டுக் கொண்டதாலேயே 24 மணி நேர நிகழ்ச்சியாக பிக்பாஸ் அல்டிமேட் துவங்கப்பட்டுள்ளதாக கூறினார்கள்.
அதே போல் நிகழ்ச்சி துவங்கியது முதலே பரபரப்பு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது. தினம் ஒரு விஷயத்திற்காக சண்டை, வாக்குவாதம், இதற்கு இடையே டாஸ்க் மோதல்கள் வேறு என்று ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பல விஷயங்களை செய்து வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தரப்பில் சொன்னதை போலவே பல போட்டியாளர்கள் பற்றிய மக்களின் கண்ணோட்டம் கொஞ்சம் மாறிக் கொண்டு தான் இருக்கிறது.
எலிமேஷனில் எஸ்கேப் ஆனவர்கள்
அதன் வெளிப்பாடாக தான் முதல் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்பது கடைசி வரை மாறிக் கொண்டே இருந்தது. முதலில் ஜுலி தான் குறைவான ஓட்டுக்கள் பெற்றிருப்பதாகவும், அவர் தான் வெளியேற போவதாகவும் சொன்னார்கள். ஆனால் பிரஸ் மீட் டாஸ்க்கால் அப்படியே நிலை மாறியது. அதற்கு பிறகு அபினய் போக போகிறார், வனிதா தான் போவார், சுருதி போவார் என பல பெயர்கள் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முதல் ஆளாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நிறுத்தப்பட்ட லைவ் ஸ்ட்ரீமிங்
இதுவரை தெரியாத போட்டியாளர்கள் பற்றிய பல உண்மைகள் வெளிவந்து, காரசார சண்டைகள் நடந்து வரும் நிலையில் பிப்ரவரி 4 ம் தேதி காலை திடீரென லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப காரணங்களால் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் வீட்டிற்குள் ஏதாவது பிரச்சனை நடக்கிறதோ. அதனால் தான் லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்பட்டு விட்டதா என ரசிகர்கள் சந்தேகம் கிளப்ப துவங்கினர். இதனால் சில மணி நேரத்திலேயே மீண்டும் லைவ் துவக்கப்பட்டது.
இப்போ என்ன பிரச்சனை
இந்நிலையில் இன்று காலை முதல் மீண்டும் லைவ் நிறுத்தப்பட்டு, ஏற்கனவே நடந்த நிகழ்வுகளே மீண்டும் காட்டப்பட்டு வருகிறது. இதனால் மீண்டும் ஏதோ பிரச்சனை போல என ரசிகர்கள் பதறி போயினர். ஆனால் பிரச்சனை காரணமாக லைவ் ஸ்ட்ரீமிங் நிறுத்தப்படவில்லையாம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லைவ் கிடையாதாம். மாலை 6.30 மணிக்கு கமல்ஹாசன் வரும் போது தான் மீண்டும் லைவ் துவங்கப்பட உள்ளதாம். இன்று எவிக்ஷன் நடக்க இருப்பதால் கமல் வரும் நிகழ்ச்சிக்காக லைவ் நிறுத்தப்படுகிறதாம்.
நாங்க எப்படி பாக்குறது
இந்த தகவல், தற்போது ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் ரெக்கார்டட் நிகழ்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கமல் வரும் நிகழ்விற்காக இன்று நாள் முழுவதும் லைவ் நிறுத்தப்படுகிறது என்றால் இன்று என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும். டிவி வெர்சனில் கமல் வரும் சனிக்கிழமை எபிசோட்டின் துவக்கத்தில் வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்படும். ஆனால் ஓடிடி வெர்சனில் லைவ் என்பதால் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் என்ன நடக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.