Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கபாலி... செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது ஏஜிஎஸ்!
ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் செங்கல்பட்டு ஏரியா உரிமையைப் பெற்றது கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம்.
கலைப்புலி தாணு தயாரித்த தெறி படத்தை செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் எம்ஜி அடிப்படையில் திரையிட மறுத்ததால், செங்கல்பட்டு தவிர பிற ஏரியாக்களில் தெறி வெளியானது. தேர்ந்தெடுத்த சில அரங்குகளில் மட்டும் இந்தப் படத்தை தாணு வெளியிட்டார்.
எனவே கபாலி படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா? என்ற கேள்வி ரசிகர்களுக்கு எழுந்தது. அதற்கு இப்போது விடை கிடைத்துள்ளது.
செங்கல்பட்டு ஏரியாவில் கபாலி படத்தை வெளியிடும் உரிமையை கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் சினிமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமே எதிர்ப்பார்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலி படத்தின் செங்கல்பட்டு விநியோக உரிமையை எங்கள் ஏஜிஎஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பைத் தந்ததற்காக ரஜினி சார் மற்றும் வி கிரியேஷன்ஸ் கலைப்புலி தாணு ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தை வெளியிடும் நாளுக்காக தியேட்டர் உரிமையாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். கபாலி குறித்த மக்களின் எதிர்ப்பார்ப்பு பிரமிக்க வைப்பதாக உள்ளது," என்று தெரிவித்துள்ளனர்.