ஐஸ்வர்யா ராய் குழந்தைக்கு பெயர் அபிலாஷாவா? - அமிதாப் மறுப்பு

ஐஸ்வர்யாராய்க்கும் அபிஷேக்பச்சனுக்கும் 2007-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி மும்பை மருத்துவமனையில் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ஏ என்ற எழுத்தில் துவங்கும் பெயராக இருக்க வேண்டும் என்பதால் பொருத்தமான பெயரை தேடி வந்தனர்.
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர் யாராய் மூவரின் பெயரும் ஏயில்தான் தொடங்குகிறது. ரசிகர்களும் பெயர்களை தேர்வு செய்து அனுப்பி வைத்து உதவுமாறு அமிதாப்பச்சன் கேட்டுக் கொண்டிருந்தார்.
இதையடுத்து லட்சக்கணக்கான பெயர்கள் வந்து குவிந்தன. மூன்று மாத தேடலுக்கு பின் அபிலாஷா என்ற பெயரை அபிஷேக்கும் ஐஸ்வர்யா ராயும் தேர்வு செய்ததாக செய்திகள் வந்தன. இதனை எழுத்தாளர் ஷோபா டே தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
ஆனால் இதனை அமிதாப்பச்சன் மறுத்துள்ளார். இது உண்மையல்ல என்று கூறியுள்ள அவர், இப்போது வரை குழந்தையை 'பேடி பி' என்றே அழைப்பதாகக் கூறியுள்ளார்.
வயிற்றுவலிக்காக சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியதும் பெயரை அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றனர்.
ஒரு ஏ-க்கு பதில் இரண்டு ஏ எழுத்துக்கள் சேர்ந்தபடி வரும் பெயர் ரொம்ப லக்கி என ஜோதிடர்கள் கூறி வருவதால், அதற்கேற்ப பெயரொன்றையும் அமிதாப் குடும்பத்தினர் தேடி வருகிறார்களாம்.


Click it and Unblock the Notifications











