Don't Miss!
- News
இருக்குற சிக்கல்ல பேனா நினைவு சின்னம் எதுக்கு? உருப்படியா ஏதாவது செய்யுங்க.. சீமானுக்கு சசிகலா ஆதரவு
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித் இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்?
சென்னை : அஜித்தை வைத்து 'காதல் மன்னன்', 'அமர்க்களம்', 'அட்டகாசம்', 'அசல்' ஆகிய படங்களை இயக்கியவர் சரண். அஜித்தை வைத்து அதிக படங்களை இயக்கியவரும் இவர்தான்.
இடையில் 'ஜெமினி', 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் போன் வெற்றிப் படங்களையும் கொடுத்தார் இயக்குநர் சரண்.
'இதயத் திருடன்', 'வட்டாரம்', 'மோதி விளையாடு', 'அசல்' படங்களின் தோல்வியால் அடுத்து வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார்.

தானே தயாரித்து இயக்கம் :
சிறிய இடைவெளிக்குப் பிறகு 'ஆயிரத்தில் இருவர்' என்ற படத்தை தானே தயாரித்து இயக்கினார். இந்தப் படத்தில் வினய்யுடன் சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசை அமைத்திருக்கிறார்.

பொருளாதாரச் சிக்கல் :
மிகுந்த பொருளாதாரச் சிக்கல்களுக்கு இடையே 'ஆயிரத்தில் இருவர்' படத்தை சிரமப்பட்டு முடித்தார் சரண். படம் முடிந்தும் வெளியிட முடியாமல் தவித்து வந்தார்.

வினய்யால் வெளியீடு :
இந்தப் படத்தின் நாயகன் வினய் வில்லனாக நடித்த 'துப்பறிவாளன்' படம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாலும், அதில் வினய்யின் நடிப்பு பேசப்படுவதாலும் இந்தச் சூழலில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண்.

22-ம் தேதி ரிலீஸ் :
வருகிற 22-ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே இரண்டு முறை 'ஆயிரத்தில் இருவர்' வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.