Don't Miss!
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Finance உங்ககிட்ட கிழிஞ்ச ரூபாய் நோட்டு இருக்கா.. அப்போ கண்டிப்பா இந்த பதிவு உங்களுக்குத்தான்!
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
என்னை கர்ப்பமாக வற்புறுத்தினார்: யுவராஜ் சிங்கின் தாய் மீது பெண் பரபர புகார்
மும்பை: கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தாய் தன்னை கர்ப்பமாக வற்புறுத்தியதாக பிக் பாஸ் 10 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ள ஆகான்ஷா சர்மா தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிக் பாஸ் டிவி ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். நிகழ்ச்சியின் 10வது சீசன் ஞாயிற்றுக்கிழமை துவங்கியது. இதில் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தம்பி ஜொராவரின் மனைவி ஆகான்ஷா சர்மா கலந்து கொண்டுள்ளார். 2014ம் ஆண்டு திருமணமான நான்கே மாதங்களில் கணவரை பிரிந்துவிட்டார் ஆகான்ஷா.
தனது மாமியார் ஷப்னம் சிங் பற்றி ஆகான்ஷா நிகழ்ச்சியில் கூறியதாவது,
மாமியார்
எனக்கும் ஜொராவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை. யுவியாலும் பிரச்சனை இல்லை. என் மாமியார் தான் பெரும் பிரச்சனையாக இருந்தார்.
தேனிலவு
நானும், ஜொராவரும் தேனிலவுக்கு சென்றபோது கூட யுவராஜ் சிங்கின் மொத்த குடும்பமும் எங்களுடன் வந்தது. எங்களை அவர்களின் கண் பார்வையிலேயே வைக்க வந்தார்கள்.
கர்ப்பம்
என்னை கர்ப்பமாகுமாறு என் மாமியார் ஷப்னம் வற்புறுத்தினார். என் மாமியாரின் கொடுமை தாங்க முடியாமல் தான் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டேன் என்றார் ஆகான்ஷா.
பொய்
ஆகான்ஷா கூறியது எல்லாம் பொய். அவர் எங்களின் பெயரை வைத்து விளம்பரம் தேடப் பார்க்கிறார். எங்கள் மீது பழி சுமத்தி தன் மீது அனைவரும் பரிதாபப்பட செய்கிறார் என்று ஷப்னம் தெரிவித்துள்ளார்.