Don't Miss!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
திருமணம் நின்றுவிட்டது, யாரும் வர வேண்டாம்: சமந்தா மாமனார் அறிவிப்பு
ஹைதராபாத்: நடிகர் நாகர்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் திடீர் என்று நின்றுவிட்டது என்று கூறப்படுகிறது.
தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, நடிகை அமலா தம்பதியின் மகன் அகில் அகினேனிக்கும் அவரது காதலியான முன்னணி ஆடை வடிமைப்பாளரான ஸ்ரேயா பூபலுக்கும் கடந்த டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து திருமண தேதியும் குறிக்கப்பட்டது.
திருமணம்
திருமணம் இத்தாலியில் உள்ள ரோம் நகரில் நடக்கவிருந்தது. அனைவருக்கும் அழைப்பிதழ் எல்லாம் கொடுத்தார்கள். இந்நிலையில் யாரும் திருமணத்திற்கு வர வேண்டாம், இத்தாலி பயணத்தை ரத்து செய்யுங்கள் என்று நாகர்ஜுனா மற்றும் ஸ்ரேயா குடும்பத்தார் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.
அகில்
அகிலுக்கும், பிரபல தொழில் அதிபர் ஜிவிகே ரெட்டியின் பேத்தியுமான ஸ்ரேயாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்களாம். இதையடுத்தே திருமணம் நிறுத்தப்பட்டுள்ளதாம்.
சமாதானம்
அகில் மற்றும் ஸ்ரேயா கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். தற்போது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துள்ள அவர்களை சமாதானம் செய்து வைக்க நாகர்ஜுனாவும், ஜிவிகேவும் முயன்றும் ஒன்றும் முடியவில்லையாம்.
நாகர்ஜுனா
என் வீட்டிற்கு சமந்தா, ஸ்ரேயா என இரண்டு மகள்கள் வருகிறார்கள் என்று சந்தோஷமாக கூறி வந்தார் நாகர்ஜுனா. இந்நிலையில் திருமணம் நின்றுள்ளது. நாகர்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் அண்மையில் திருமணம் நிச்சயமானது என்பது குறிப்பிடத்தக்கது.