போய் பெரிய ஆள கூட்டிட்டு வா: பாருக்கு போன பிரபல நடிகையை விரட்டிவிட்ட பவுன்சர்கள்
மும்பை: லண்டனில் உள்ள பார் ஒன்றுக்கு சென்ற பாலிவுட் நடிகை ஆலியா பட்டை உள்ளே அனுமதிக்கவில்லையாம்.
ஆலியா பட், வருண் தவான் நடித்த பத்ரிநாத் கி துல்ஹனியா படம் ரூ. 100 கோடி வசூல் செய்த சந்தோஷத்தில் உள்ளார். ஷாருக்கானுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார்.
ரொம்ப பிசி டேட்ஸ் இல்லை என்று ஷாருக்கிடம் தெரிவித்துள்ளார் ஆலியா.

ஆலியா
ஆலியா பட்டுக்கு 24 வயது ஆகிறது. ஆனால் அவரை பார்த்தால் மிகவும் இளமையாக தெரிவார். 24 வயது போன்று இருக்க மாட்டார். இதனாலேயே அவருக்கு லண்டனில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

பார்
லண்டனில் பார் ஒன்றுக்கு சென்றுள்ளார் ஆலியா. அவரை பார்த்த பவுன்சர்கள் ஆலியா மைனர் என நினைத்து உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.

ஐடி கார்டு
ஆலியா தனது ஐடி கார்டை எடுத்துக் காட்டியும் அவருக்கு 24 வயது என்பதை பவுன்சர்கள் நம்பவில்லை. பாருக்கு வருவதற்காக ஆலியா போலி ஐடி கார்டு கொண்டு வந்ததாக நினைத்துள்ளனர்.

லண்டன்
எவ்வளவு சொல்லியும் தான் 24 வயது மேஜர் என்பதை யாரும் நம்பாததால் அவரால் பாருக்கு செல்ல முடியவில்லை. இதை ஆலியா பட்டே வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











