Just In
- 37 min ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 48 min ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
- 54 min ago
சம்மர் சம்பவம் லோடிங்.. கிளைமேக்ஸை நெருங்கும் வலிமை.. இன்னும் சில நாட்கள் தான் ஷூட் இருக்காம்!
- 2 hrs ago
சனம் ஷெட்டியின் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்.. அவங்களே சொல்லியிருக்காங்க.. என்னன்னு பாருங்க!
Don't Miss!
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள்... 50% ரசிகர்களை அனுமதிக்க திட்டம் போடும் பிசிசிஐ!
- Finance
சென்செக்ஸ் 1000 முதல் 50,000 வரை.. 30 வருட பயணம்.. இதோ ஒரு பார்வை..!
- News
கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா
- Automobiles
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
“சீக்கிரமே அவங்களுக்கு கல்யாணம்”.. அவசரப்பட்டு உளறிக் கொட்டிய பிரபல நடிகை.. கோபத்தில் இளம் நடிகை!
மும்பை: நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷயத்தை நடிகை தீபிகா படுகோன் வாய்த்தவறி உளறிவிட்டார்.
இந்திய சினிமாவில் உள்ள முக்கிய நடிகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை இணைய ஊடகம் ஒன்று சமீபத்தில் நடத்தியது. விஜய் சேதுபதி, விஜய் தேவரகொண்டா, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஆயுஷ்மான் குரானா, பார்வதி திருவொத்து, மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடலின் போது, நடிகர் விஜய் வேதரகொண்டாவிடம் இந்திய சினிமா நடிகர்களில் யாரிடம் இருந்து ஆலோசனை பெற விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு விஜய் பதில் அளிக்கையில், தீபிகா மற்றும் ஆலியா மீது தனக்கு அளவுகடந்த காதல் இருப்பதாகக் கூறினார்.
அடுத்தடுத்து இரண்டு சமுத்திரகனி படங்களில் நடித்து வருகிறார் அதுல்யா

உளறிய தீபிகா
இதை கேட்ட தீபிகா டக்கென குறிக்கிட்டு தனக்கு திருமணம் ஆகிவிட்டதை விஜய் தேவரகொண்டாவுக்கு நினைவுபடுத்தினார். அதோடு சைடு கேப்பில், ஆலியாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது என்ற செய்தியை வாய்த்தவறி உளறிவிட்டார்.

ஆலியா அதிர்ச்சி
தீபிகா இப்படி சொன்னதை கேட்ட ஆலியா செமையாக அதிர்ச்சி ஆகிவிட்டார். "இப்போது ஏன் இதை பற்றி பேச வேண்டும்", என தீபிகாவிடம் கோபப்பட்டார். இதனால் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

சமாளித்த தீபிகா
இப்படி வாய்விட்டு மாட்டிக்கொண்டோமே என தீபிகாவுக்கும் தர்மசங்கடமாகிவிட்டது. இதையடுத்து அவர், ஆலியாவை பற்றி உயர்த்தி பேசி, சிரித்து மலுப்பி நிலைமையை சமாளித்தார். இருந்தாலும் தீபிகா கூறியது ஹைலைட்டாகிவிட்டது.

உறுதியான திருமணம்
நடிகை ஆலியா பட்டும், ரன்பீர் கபூரும் காதலிப்பதாக ஏற்கனவே ஒரு தகவல் பாலிவுட்டில் உலா வருகிறது. சமீபத்தில் நடந்த ரன்பீர் கபூரின் உறவினர் வீட்டு விஷேசத்திலும் ஆலியா கலந்துகொண்டார். இந்த சூழலில் தீபிகா இந்த உளறல், ஆலியா - ரன்பீரின் திருமணத்தை உறுதி செய்துள்ளதாகவே பாலிவுட்டில் பேசப்படுகிறது.