எல்லாக் கண்ணும் புலி மேலதான்- ட்விட்டரில் கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: அக்டோபர் 1 ம் தேதி விஜயின் புலி திரைப்படம் வெளியாகிறது எனவே எல்லோரும் புலி படத்தின் மீது தங்கள் பார்வையைப் பதித்து உள்ளனர்.
இதனை "All Eyes On Puli" என்ற வார்த்தைகளை வைத்து ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள், காலையில் இருந்தே ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது இந்த வார்த்தை.
ஹெஷ்டேக் போடாமலே ட்விட்டரில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது "All Eyes On Puli", ரசிகர்களின் ட்வீட்டுகளில் இருந்து ஒருசில வித்தியாசமான பதிவுகளை இங்கே பார்ப்போம்.
புலினா அடங்கணும்
எவ்வளவு பெரிய அடங்காதவனா இருந்தாலும் எங்க புலி முன்னாடி அடங்கித் தான் போகணும் என்று கூறியிருக்கிறார் பத்ரி ஜெபா.
திருமலையில் ஆரம்பம்
புலி படத்துல மட்டும் நாங்க மாஸ் காட்டல இதெல்லாம் நாங்க திருமலை படத்துல இருந்தே ஆரம்பிச்சிட்டோம் - நிஷ்வேதா.
கமர்ஷியல் ஹீரோ - சூப்பர் ஹீரோ
கமர்ஷியல் ஹீரோவில இருந்து விஜய் சூப்பர் ஹீரோவாக மாறும் தருணமிது, கண்டிப்பா அக்டோபர் 1 ம் தேதி சொல்லி அடிப்போம் என்று கூறியிருக்கிறார் அரவிந்த்.
எல்லோர் கண்ணும் விஜய் மேலதான்
எல்லோருமே விஜயின் கண்ணுக்காகவே படத்தைப் பார்க்க வருவார்கள், மொத்தத்தில் விஜயின் கண்கள் மாஸ் என்று பதிவிட்டு இருக்கிறார் கவுதம்.


Click it and Unblock the Notifications











