Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினியிடமிருந்து அழைப்பு... அதிர்ந்த மலையாளப் பட இயக்குநர்!
பொதுவாகவே தமிழ் திரைத்துறையில் இருக்கும் இயக்குநர்கள், நடிகர்களுக்கு ரஜினியுடன் இணையும் ஆர்வம் ஏகத்துக்கும் உண்டு. அவரிடமிருந்து அழைப்பு வராதா எனக் காத்திருப்பார்கள்.
அட்டகத்தி, மெட்ராஸ் என்ற இரண்டே படங்கள் இயக்கி, வளரும் இயக்குநராக இருந்த ரஞ்சித், ரஜினியிடமிருந்த வந்த ஒரு அழைப்பில் இன்று முதல் நிலை இயக்குநராகிவிட்டார்.
இதேபோன்ற ஒரு அழைப்பு, இன்னொரு வளரும் இயக்குநருக்கு ரஜினியிடமிருந்து வந்தது. ஆனால் அவரோ ரஜினியைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறார் இன்னமும்.
இந்த இயக்குநரின் பெயர் அல்போன்ஸ் புத்திரன். கேரளாவின் சென்சேஷனல் இயக்குநர். பிரேமம் படத்தை இயக்கியவர்.
தமிழில் இவர் இயக்கிய படம்தான் நேரம்.
பிரேமம் படம் பார்த்த ரஜினிகாந்த், அல்போன்ஸ் புத்திரனிடம் கதை கேட்க அழைப்பு விடுத்துள்ளார். அதிர்ந்து போன அல்போன்ஸ், "ரஜினி மிகப் பெரிய நடிகர். அவருக்கு படம் பண்ணும் அளவுக்கு என் அனுபவமில்லை. அவ்வளவு பட்ஜெட்டை கையாளும் திறன் எனக்கு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. எனவேதான் அவரைச் சந்திக்க தயங்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற ஒரு சாதனையாளரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்ததே மிகப் பெரிய அங்கீகாரம்தான்," என்கிறார்.