Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளேனா?: வைரமுத்து விளக்கம்
சென்னை: தான் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா காலமானார். அவரை அடுத்து அப்பல்லோவில் இருந்த பத்தரிகையாளர் சோ உயிர் இழந்தார்.
இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

வைரமுத்து
வைரமுத்துவும் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராமே. அவருக்கு என்ன ஆனது என தெரியவில்லை என்று ஆளாளுக்கு பேசத் துவங்கினர்.

அப்பல்லோ
தன்னை பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீயாக பரவி வருவது குறித்து அறிந்த வைரமுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். அவர்
ட்விட்டரில் கூறியிருப்பதாவது, வணக்கம். ஒவ்வோர் ஆண்டும் நான் முழு உடல் பரிசோதனை செய்வது வழக்கம். அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனை செய்து கொண்டேன்.
|
நலம்
நான் முழு உடல் நலத்தோடு
இருப்பதாக அப்போலோ மருத்துவக் குறிப்பு தெரிவிக்கிறது.
பரபரப்பான செய்திகள் பரப்ப வேண்டாம்.
என் மீது தான் எவ்வளவு அன்பு. அக்கறைகொண்டு விசாரித்த அனைவருக்கும் நன்றி.
ஊடகங்களுக்கு என் வணக்கம் என வைரமுத்து ட்வீட்டியுள்ளார்.
|
மதன் கார்க்கி
என் தந்தை பற்றி பரவும் செய்தியில் உண்மை இல்லை. நாங்கள் வருடாந்திர முழு உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்துள்ளோம் என மதன் கார்க்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.