அமலா பால் ஓணம் பண்டிகையை யாருடன், எங்கு கொண்டாடினார் தெரியுமா?
இடுக்கி: நடிகை அமலா பால் ஓணம் பண்டிகையை தனது குடும்பத்தாருடன் தேக்கடியில் கொண்டாடியுள்ளார்.
கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார் அமலா பால். அவர் பாபி சிம்ஹாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள திருட்டுப் பயலே 2 படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
நிகழ்ச்சிக்கு அழகாக வந்திருந்தார் அமலா பால்.
ஓணம்
அமலா ஓணம் பண்டிகையை தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் சேர்ந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடியில் கொண்டாடியுள்ளார்.
ஓணம் சாத்யா
ஓணம் என்றால் சாத்யா(விருந்து) இல்லாமலா. ஓணம் பண்டிகை தினத்தன்று டயட்டை எல்லாம் மறந்துவிட்டு சாப்பாட்டை ஒரு பிடி பிடித்துள்ளார் அமலா.
உறவினர்கள்
பண்டிகை நேரத்தில் உறவினர்களுடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி அளிக்கும். அமலா பாலும் தனது கசின்களுடன் நேரம் செலவிட்டதை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

திருட்டுப் பயலே
திருட்டுப் பயலே 2 படத்தை இயக்கியுள்ள சுசி கணேசன் அன்ட் டீமுடன் சேர்ந்து மீண்டும் வேலை செய்ய ஆவலாக உள்ளதாக அமலா பால் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











