Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
திரைத் துளி
குற்றாலத்தில் பெண்கள் பகுதியில் குளித்த நடிகர் ஆனந்த் கைது
குற்றால அருவியில் பெண்கள் பகுதியில் தான் குளிப்பேன் என நடிகர் ஆனந்த் குடித்துவிட்டு கலாட்டா செய்தார். இதைத் தட்டிக்கேட்ட போலீஸ் அதிகாரியைத் தாக்கினார்.
பூந்தோட்டக் காவல்காரன் படத்தில் அறிமுகமான ஆனந்த்துக்கு அவ்வப்போது படங்கள் வரும். திருடா திருடாவில் நடித்தார்.அதன் பின்னர் காணாமலே போய்விட்டார். இப்போது டிவியில் அழுவாச்சி நாடங்களில் நடித்து வருகிறார்.
இவர் மீது திமுக ஆட்சியில் ஒரு கொலை வழக்கு உள்ளது. குடிபோதையில் ஒரு பெண்ணுடன் காரை ஓட்டி வந்த இவர்போக்குவரத்துக் காவலர் மீது காரை ஏற்றினார். அதில் காவலர் அந்த இடத்திலேயே இறந்தார். ஆனால், சரத்குமார் தலையிட்டுதிமுக தலைமையிடம் பேசி ஆனந்தை காப்பாற்றினார்.
இப்போது மீண்டும் ஒரு போலீஸ்காரைத் தாக்கியுள்ளார் ஆனந்த். தனது மனைவியுடன் குற்றாலம் வந்த இவர் புல் போதையில்இருந்தார். தனது மனைவி, நடிகர் பாலாசிங் ஆகியோருடன் சேர்ந்து நள்ளிரகவில் ஐந்தருவியில் குளிக்க வந்தார்.
வந்தவர் நேராக மனைவியுடன் சேர்ந்து பெண்கள் பகுதியில் குளிக்க வந்தார். இதையடுத்து அங்கு குளித்துக் கொண்டிருந்த மற்றபெண்கள் முகம் சுளித்தனர்.
அப்போது அங்கு காவலில் இருந்த குற்றாலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முருகையா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.நீங்கள் ஆண்கள் பகுதிக்குச் செல்லுங்கள் என்று கூறிய சப்-இன்ஸ்பெக்டரை ஆனந்த் தாக்கினார். கழுத்தைப் பிடித்துத் தள்ளினார்.
இதையடுத்து பொது மக்களும் மற்ற காவலர்களும் சேர்ந்து ஆனந்த், பாலாசிங் மற்றும் அவர்களுடன் வந்த இன்னொரு நபரைப்பிடித்தனர். மூவர் மூதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் இவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.