Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
"பீப்"பு கிடக்குது ஒருபக்கம்... காதலர் தினத்தன்று புதிய பாடலை வெளியிடும் "கனடா" அனிருத்
சென்னை: காதலர் தினத்தன்று புதிய பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.
அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடலுக்கு எதிர்ப்புகளும், கண்டனங்களும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இது தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையே இசை நிகழ்ச்சிக்காக கனடா சென்றிந்த அனிருத், கைது பயத்தால் அங்கேயே தங்கி விட்டார்.
|
புதிய பாடல்...
இந்நிலையில், வரும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு புதிய பாடல் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளார் அனிருத்.
காதலர் தினத்தன்று...
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வழக்கம்போல இந்தாண்டும் காதலர் தினத்தன்று புதிய பாடல் ஒன்றை வெளியிட இருக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்ப்பு...
ஏற்கனவே பீப் பாடல் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அனிருத் புதிய பாடல் ஒன்றை வெளியிட இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பாடலை தற்போதே அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.
படங்கள்...
பீப் பாடல் பிரச்சினையால் கைவசமிருந்த பலப் படங்களை அனிருத் இழந்தது குறிப்பிடத்தக்கது.