Don't Miss!
- Technology போட்டோ எடுங்க.. நேரா கடையில் போய் பிரிண்ட் போடுங்க.. மிரட்டலான கேமரா போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- News இனி தங்கம் வாங்க முடியாது..ஆணுக்கு தங்கம், பெண்ணுக்கு பவுனு..! திண்டுக்கல் சீனிவாசனின் அடடே ஐடியா..!
- Lifestyle அடர்த்தியான, அழகான கூந்தலுக்கு வீட்டில் சூடான எண்ணெய் சிகிச்சை செய்யுங்கள்..!
- Sports ஐபிஎல் நல்லா இருக்கனும்னா, ஆர்சிபி அணியை விற்று விடுங்கள்.. டென்னிஸ் ஜாம்பவான் கொந்தளிப்பு
- Finance ஆதார் கார்டு டெட்லைன் நெருங்குது.. மறக்காம இதை செய்திடுங்க.. இல்லாட்டி வருத்தப்படுவீங்க..!
- Automobiles மைலேஜில் டூவீலர்களே ஒரு அடி பின்னாலதான் நிக்கணும்! புது அவதாரம் எடுக்கிறது மாருதி ஸ்விஃப்ட்! புக்கிங் தொடக்கம்
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
- Travel இந்தியாவில் உள்ள பழத் தலைநகரங்கள் பற்றி தெரியுமா – மாம்பழ, வாழைப்பழ, கொய்யா தலைநகரங்கள்!
ராஜமெளலி படத்தில் சம்பளம் வாங்காமல் வேலை செய்த அனிருத்...என்ன காரணம் தெரியுமா?
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத், டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் வேலை செய்து கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர், பாடகர் என்ற பெயருடன் பல சூப்பர் ஹிட் பாடல்களை உருவாக்கியவர் அனிருத். தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். முதல் படத்திலேயே இவர் இசையமைத்த கொலவெறி பாடல் உலக ஃபேமஸ் ஆகி விட்டது. ஒரே பாட்டில் அனைவரையும் தன்னை பற்றி பேச வைத்து விட்டார் அனிருத்.
அடக்கம் வேணும்.. அருகதை இல்லை.. வனிதா விஜயகுமாரை டார் டாராக கிழித்து தொங்க விட்ட சுரேஷ் தாத்தா!
டாப் ஹீரோக்களுக்கு இசை
அதைத் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, விஜய் சேதுபதி, அஜித், சூர்யா, ரஜினி, விஜய், கமல் போன்ற அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களிலும் பல சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பல பாடல்களை தானே பாடியும் உள்ளார். தற்போது கமல் நடிக்கும் விக்ரம், இந்தியன் 2 ஆகிய படங்களுக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.
சம்பளம் வாங்காத அனிருத்
இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமெளலியின் படத்திற்காக அனிருத் சம்பளமே வாங்காமல் வேலை செய்துள்ள தகவலை ராஜமெளலியே பேட்டி ஒன்றில் கூறி உள்ளார். எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பிரம்மாண்ட படமான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நட்பு பாடலை அனிருத் தான் பாடி உள்ளார். இந்த பாடலை 5 மொழிகளிலும் அனிருத் தான் பாடி உள்ளார். அனிருத்தின் குரலில் அமைந்த இந்த பாடல் ராஜமெளலியின் மனதிற்கு மிகவும் பிடித்து விட்டதாம்.
இது தான் காரணமா
ஆர்ஆர்ஆர் படத்திற்காக நட்பு பாடலை பாடுவதற்கு தான் அனிருத் சம்பளம் வாங்கவில்லையாம். சம்பளம் பற்றி அனிருத்திடம் பேசிய போது, இதை உங்கள் மீதுள்ள அன்பிற்காக தான் செய்கிறேன். இசை, பாடல் என எதற்கும் சம்பளம் வேண்டாம் என ராஜமெளலியிடமே கூறி மறுத்து விட்டாராம் அனிருத். இந்த தகவலை தான் தற்போது ராஜமெளலி வெளியிட்டுள்ளார்.
ரிலீசிற்கு தயாராகும் ஆர்ஆர்ஆர்
ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படம் ஜனவரி 7 ம் தேதியே ரிலீசாகி இருக்க வேண்டியது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் கடைசி நிமிடத்தில் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மார்ச் 25 ம் தேதி ஆர்ஆர்ஆர் படம் அனைத்து மொழிகளிலும் ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. இதனால் ரிலீசிற்கான வேலைகளும் ப்ரொமோஷன் வேலைகளும் தீவிரமாக நடந்து வருகிறது.