தனுஷுடனான சண்டை, பிரிவு: அனிருத் விளக்கம்
சென்னை: தனுஷுடனான மோதல், பிரிவு குறித்து இசையமைப்பாளர் அனிருத் விளக்கம் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யாவின் உறவுக்கார பையனான இசையமைப்பாளர் அனிருத்தை வளர்த்துவிட்டு அழகு பார்த்தார் தனுஷ். அதன் பிறகு அவர்களிடையே மனக் கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.
தனுஷ் அனிருத்தை ட்விட்டரில் ஃபாலோ செய்வதை நிறுத்திவிட்டார்.

பிரேக்கப்
எனக்கும் தனுஷுக்கும் இடையே பிரச்சனை எல்லாம் கிடையாது. நாங்கள் பிரியவில்லை. நாங்கள் பிரிந்துவிட்டதாக கூறுவதில் உண்மை இல்லை என்று அனிருத் தெரிவித்துள்ளார்.

தனுஷ்
நானும், தனுஷும் இன்றும் பேசிக் கொண்டு தான் இருக்கிறோம். எந்த ஒரு உறவிலும் இருவருக்கும் இடையே கொஞ்சம் ஸ்பேஸ் தேவை என அனிருத் கூறியுள்ளார்.

பிறந்தநாள்
தனுஷுடன் டச்சில் உள்ளதாக அனிருத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனிருத்தின் பிறந்தநாள் அன்று அவருக்கு தனுஷ் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சிவா
தனக்கு ஆகாமல் போன சிவகார்த்திகேயனுடன் ஒட்டி உறவாடுவது, சிம்புவின் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கியது ஆகியவற்றால் தனுஷ் அனிருத்தை தள்ளி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











