twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாரி சொல்லி கால்ல விழுந்துருவேன் பிக்பாஸ்.. கன்ஃபெஷன் ரூமில் கதறிய கண்ணுக்குட்டி!

    |

    சென்னை: தனது கணவரை பார்த்தால் முதலில் சாரி சொல்லி காலில் விழுந்து விடுவேன் என கன்ஃபெஷன் ரூமில் கதறி அழுதார் அனிதா.

    பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. நாள் தோறும் ஒரு பிரச்சனை சண்டை சச்சரவு சர்ச்சைகள் என செல்கிறது.

    பிக்பாஸ் வீட்டில் பல அதிரடி திருப்பங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் 70 நாட்களில் பிக்பாஸ் வீட்டில் நீங்கள் செய்தது என்ன? யாரை மிஸ் பண்றீங்க என்று கேட்டார் பிக்பாஸ்.

    ரெசார்ட்டில் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி சித்ராவை மிரட்டிய பிரபல நடிகர்? வெளியான பகீர் தகவல்!ரெசார்ட்டில் நெருக்கமாக இருந்த வீடியோவை காட்டி சித்ராவை மிரட்டிய பிரபல நடிகர்? வெளியான பகீர் தகவல்!

    எப்படி இருந்தது?

    எப்படி இருந்தது?

    இதில் இதுவரை பிக்பாஸ் வீட்டில் இருந்த ஷிவானி மற்றும் ரியோ ஆகியோர் கன்ஃபெஷன் ரூமில் சென்று பிக்பாஸிடம் கதறினர். இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அனிதாவை கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ், இத்தனை நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தீர்கள் எப்படி இருந்தது என்று கேட்டார்.

    அப்ஸ் அன்ட் டவுன்ஸ்

    அப்ஸ் அன்ட் டவுன்ஸ்

    அதற்கு அழுகையும் சிரிப்பும் கலந்தப்படியே படியே பதில் சொன்ன அனிதா, நிறைய அப்ஸ் அன்ட் டவுன்ஸ் இருந்தது. நிறைய அழுதுருக்கேன் நிறைய கோபப்பட்டுருக்கேன். எதை செய்யக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்களோ அதைத்தான் செய்திருக்கேன் என்று அழுதார்.

    முதலில் சாரி சொல்வேன்

    முதலில் சாரி சொல்வேன்

    இதனைத் தொடர்ந்து பேசிய பிக்பாஸ், உங்கள் கணவரை இப்போது பார்த்தால் என்ன பேசுவீர்கள் என்று கேட்டார். அதற்கும் அழுதப்படியே பதில் சொன்ன அனிதா, முதலில் சாரி சொல்வேன், இங்கே வந்த போது அழக்கூடாது கோபப்படக்கூடாது என்று சொல்லி அனுப்பினார்.

    காலில் விழுந்துவிடுவேன்

    காலில் விழுந்துவிடுவேன்

    அதைத்தான் அதிகம் பண்ணியிருக்கிறேன். நான் உள்ளே ஜாலியா இருக்கேன். ஆனா எல்லாத்தையும் வெளியே இருந்து பார்ப்பது அவர்தான். அதனால எல்லா கஷ்டமும் அவருக்குதான். சாரி பப்பு என்று சொல்லி காலில் கூட விழுந்துருவேன் என்றார்.

    யார் செல்லமுமில்லை

    யார் செல்லமுமில்லை

    தொடர்ந்து பேசிய பிக்பாஸ் அனிதா அப்பா செல்லமா அம்மா செல்லமா என்று கேட்டார். அதற்கு அப்பா செல்லமும் இல்லை அம்மா செல்லமும் இல்லை. எல்லாருக்கும் எல்லோர் மீதும் அன்பு அக்கறை இருந்தது. வாழ்க்கையை போராட்டம் நிறைந்ததாய் இருந்ததால் செல்லமாக வளரவில்லை.

    என்ஜாய் பண்ணல..

    என்ஜாய் பண்ணல..

    வீடு வீடாய் சென்ற டியூஷன் எடுப்பேன். வீட்டு பிரச்சனைகளை யோசித்து, அப்போதே 40 வயசு லேடி போல் இருந்தேன். இளமையை முழுவதுமாய் என்ஜாய் பண்ணவில்லை. ஆனால் ரெஸ்பான்ஸிப்பிளா இருந்ததை நினைத்து பெருமைப்படுகிறேன் என்றார்.

    Recommended Video

    சினிமாவில் MALE DOMINATION அதிகம் | ACTRESS LAKSHMI DEVY CHAT P-03 | FILMIBEAT TAMIL
    போகலாம் கன்னுக்குட்டி

    போகலாம் கன்னுக்குட்டி

    அதனைக் கேட்ட பிக்பாஸ், இதுவரை நல்லா விளையாடினீங்க.. இனிமேலும் எண்டெர்டெய்ன் செய்யுங்க என்றார். அதற்கு ஓகே பிக்பாஸ், ட்ரை பண்றேன் என்றார் அனிதார். அதனை தொடர்ந்து கன்னுக்குட்டி நீங்க போகலாம் என்று கூறினார். தன்னை கன்னுக்குட்டி என்று கூறியதை கேட்ட அனிதா ஹேப்பியாக கன்ஃபெஷன் ரூமில் இருந்து வெளியே வந்தார்.

    English summary
    Anitha cried to Biggboss in Confession room. She said if she see her husband she will be apologize to her husband.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X