அய்யய்யோ இலங்கையில் அனுஷ்கா: அப்போ 'ஓடிஐ'யில் இந்தியா தோத்துடுமா?
சென்னை: நடிகை அனுஷ்கா சர்மா இலங்கை சென்றுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரை கலக்கம் அடைய செய்துள்ளது.
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருகிறார்கள். இடையில் பிரிந்தாலும் சில மாதங்களில் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.
தற்போது இலங்கையில் உள்ள கோஹ்லியை பார்க்க அனுஷ்கா அங்கு சென்றுள்ளார்.
இலங்கை
இலங்கை ஹோட்டல் ஒன்றில் கோஹ்லி, அனுஷ்கா, ரவி சாஸ்திரி ஆகியோர் ரசிகர், ரசிகைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

அய்யய்யோ
புகைப்படத்தை பார்த்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களோ அய்யய்யோ அனுஷ்கா இலங்கை சென்றுள்ளாரா அப்படி என்றால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடையும் என்று சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

அனுஷ்கா
அனுஷ்கா ஒரு கிரிக்கெட் போட்டிக்கு நேரில் வந்து கோஹ்லியை உற்சாகப்படுத்தினால் அந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் என்று ரசிகர்கள் கருதுகிறார்கள்.

கோஹ்லி
ரசிகர்களின் இந்த தவறான எண்ணத்தை மாற்ற முயன்று தோற்றார் கோஹ்லி. போட்டியை பார்க்க அனுஷ்கா வந்தால் என்ன, நம்ம வீரர்கள் நிச்சயம் ஜெயிப்பார்கள்.

ஓடிஐ
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்துவிட்டது. இந்நிலையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகள் வரும் 20ம் தேதி துவங்குகிறது. 5 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











