Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நீங்கதான் ரியல் ஸ்டார்கள்.. பெண் போலீஸ் அதிகாரிகளை அப்படி பாராட்டிய நடிகை அனுஷ்கா!
ஐதராபாத்: பெண் போலீஸ் அதிகாரிகளால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம் என்று நடிகை அனுஷ்கா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார்.
'பஹிரா' படபிடிப்பு முடிந்தது.. சம்மரில் ரிலீஸ்!
இப்போது படங்களில் நடிக்காமல் இருக்கும் அவர், அடுத்து தமிழில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
சைபராபாத் கமிஷனர்
இதற்கிடையே அவர் ஐதராபாத்தில் நடந்த பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். சைபராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜ்ஜனார் தலைமையில் பெண் காவல்துறை அதிகாரிகளுக்கான முதல் மாநாடு நேற்று நடைபெற்றது.
ரீல் நட்சத்திரம்
இதில் சிறப்பு விருந்தினராக நடிகை அனுஷ்கா, கலந்துகொண்டார். அப்போது அவர் பேசும்போது, திரையில் எங்களை ஸ்டார்களாக காட்டினாலும் இந்த அறையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் ஒவ்வொருவரும் தான் நட்சத்திரம். நாங்கள் ரீல் நட்சத்திரங்கள், நீங்கள் ரியல் நட்சத்திரங்கள்.
அதிகாரிகள்
உங்கள் கடும் முயற்சி மற்றும் உழைப்பால்தான் நாங்கள் பாதுகாப்பாக உணர்கிறோம். உங்கள் தியாகங்கள் உயர்வானவை. இந்த நிகழ்வில் கலந்துகொண்டதன் மூலம் நான் மகிழ்ச்சி மற்றும் பெருமை அடைகிறேன்' என்று குறிப்பிட்டார். பெண் அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்களைப் பற்றி பேசுவதற்காக இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
பெண் செக்யூரிட்டி
இதில் 750-க்கும் அதிகமான பெண் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஷீபஹி ('SHEpahi') என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அவசர எண் 100 வாகனங்கள் மற்றும் ஷீ பேருந்து வசதியும் துவக்கி வைக்கப்பட்டன. ஐடியில் பணியாற்றும் பெண்களுக்கான இந்த ஷீ பேருந்தை பெண் டிரைவர் இயக்குவார். பெண் செக்யூரிட்டியும் இதில் இருப்பார்கள்.