Don't Miss!
- News பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எது? சேலத்தில் இவரா? உத்தேச வேட்பாளர்கள் லிஸ்ட் ?
- Finance H-1B விசா: ஐடி ஊழியர்களுக்கு 3 நாளில் குட் நியூஸ்.. பல பேரின் வாழ்க்கை மாறப்போகுது..!!
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Technology ஆதார் அப்டேட் செய்ய போறீங்களா? தெரியாம கூட இந்த தவறை செய்யாதீர்கள்.. கணக்கு வைக்கும் UIDAI ஆணையம்..
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
ரஜினிக்காக ஒரு கதை ரெடி!- ஏ ஆர் முருகதாஸ்
ஒரு ரஜினி ரசிகனாக அவரை இயக்க வேண்டும் என்ற ஆசை பல ஆண்டுகளாக உள்ளது. அவருக்காக ஒரு கதையும் வைத்துள்ளேன் என்று இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் கூறினார்.
தமிழ் சினிமாவில் நம்பிக்கையான இயக்குநர்களில் ஒருவர் ஏ ஆர் முருகதாஸ். தமிழில் மட்டுமல்ல, இந்தியிலும் மிகவும் தேடப்படும் இயக்குநர். தெலுங்கில் தனது இரண்டாவது நேரடி படத்தை இயக்கியுள்ளார். அது மகேஷ் பாபு நடித்துள்ள ஸ்பைடர்.
கனவு
முருகதாஸின் நீண்ட நாள் கனவு ரஜினிகாந்தை இயக்குவது. இதை அவரும் பல ஆண்டுகளாக மீடியாவில் கூறிவருகிறார். ஆனால் அதற்கு சரியான வாய்ப்பு அவருக்கு அமையவில்லை.
ரஜினி கேட்ட கதை
ஒரு முறை ரஜினியைச் சந்தித்து ஒரு கதையை முருகதாஸ் கூற, அந்தக் கதை பிடித்திருந்தாலும் அவர் நடிக்க ஒப்புக் கொள்ளாமல் சிரஞ்சீவிக்கு பரிந்துரைத்தார். அந்தப் படம்தான் பெரும் வெற்றிப் பெற்ற ஸ்டாலின்.
மீண்டும்
இப்போது மீண்டும் ரஜினியை இயக்கும் தன் ஆசையை வெளியிட்டுள்ளார் முருகதாஸ். அவர் கூறுகையில், "நான் ஒரு தீவிர ரஜினி ரசிகன். அவருக்காக கதை உருவாக்குவது எனக்கு கஷ்டமான விஷயம் இல்லை.
கதை ரெடி
ஒரு மாதத்துக்குள் அவருக்கேற்ற ஒரு கதையை என்னால் உருவாக்க முடியும். ஏற்கெனவே ஒரு கதையும் வைத்துள்ளேன். அவர் சரி என்றால் போதும். ரஜினியுடன் இணைந்து படம் பண்ணும் ஆசை நிறைவேறும் என நம்புகிறேன்," என்றார்.
சாத்தியமா?
ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவிருக்கும் சூழலில், முருகதாஸுக்கு படம் பண்ணுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.