Don't Miss!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- News எனக்கே ஸ்கெட்சா? தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தகராறு..தூக்கியடிக்கப்படும் தலைகள்! இவர் தான் காரணமா?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Lifestyle சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இவ்வளவு ஈசியா EPF பாஸ்புக் டவுன்லோட் செய்ய முடியுமா.. சிம்பிள் ஸ்டெப்ஸ்!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே அணியில் குளறுபடி.. தீபக் சாஹரை நம்பாத ருதுராஜ்.. தோல்விக்கு காரணமே இதுதான்
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழா தமிழா கண்கள் கலங்காதே... விடியும், விடியும் உள்ளம் மயங்காதே! - ஏ ஆர் ரஹ்மான்
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது வீட்டில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருந்தார் ஏஆர் ரஹ்மான்.
திரையுலக பிரபலங்கள் பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு அளித்து வருகின்றனர். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று மவுனப் போராட்டம் நடந்தது. இதில் ரஜினி, கமல், அஜீத் என பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து, சென்னையில் உள்ள தனது வீட்டில் நேற்று அதிகாலையில் இருந்து மகன் அமீன், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் குடும்பத்தாருடன் காலையில் இருந்து நோன்பு என்னும் உண்ணாநிலையை கடைபிடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான்.
நோன்புக்கு இடையில் 'ரோஜா' படத்தில் இடம்பெற்ற 'தமிழா, தமிழா கண்கள் கலங்காதே - விடியும், விடியும் உள்ளம் மயங்காதே' பாடலின் சில வரிகளை தனது குரலில் பாடி ட்விட்டரில் வெளியிட்டார் ரஹ்மான்.
மாலை 6.14 மணியளவில் ஜி.வி.பிரகாஷ், மகன் அமீன் ஆகியோருடன் தண்ணீர் அருந்தி நோன்பை நிறைவு செய்த காட்சியையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.