Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- News முட்டையை உடைத்து ஆப்ஃபாயில் போடாதீங்க! போலீஸ் பிடிக்கும்.. சேலத்தில் நடந்ததை பாருங்க
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
AR Rahman: ஆஸ்கர் விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்த ரஹ்மான்: ஏன் தெரியுமா?
மும்பை: ஆஸ்கர் விருது விழாவுக்கு முந்தைய நாள் பட்டினி கிடந்துள்ளார் இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடந்த 2009ம் ஆண்டு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தது. அவர் இரண்டு கையில் இரண்டு விருதுகளை வைத்துக் கொண்டு நின்றதை மறக்கத்தான் முடியுமா?
ரஹ்மான் ஆஸ்கர் வாங்கி 10 ஆண்டுகள் ஆனதை கொண்டாட மும்பை தாராவி பகுதியில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுகள் பற்றி ரஹ்மான் கூறியிருப்பதாவது,
ஆஸ்கர்
ஆஸ்கர் விருதுகளை வாங்குவதற்கு முன்பு பதட்டமாக எல்லாம் இல்லை. விருது விழாவில் ஒல்லியாக ஷேப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக முதல் நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தேன்.
அங்கீகாரம்
ஹாலிவுட்டில் இருக்க ஆஸ்கர் விருது வாங்கியவர் என்ற அங்கீகாரம் கை கொடுத்தது. தற்போது எப்பொழுது என் பெயரை யாராவது ஹாலிவுட்டில் தெரிவித்தாலும் அவர்களுக்கு அது நான் தான் என்று தெரிகிறது.
ஊக்கம்
ஆஸ்கர் விருது, அங்கீகாரம் கிடைத்தது இசையை தாண்டி படங்களை தயாரிக்கவும் எனக்கு ஊக்கம் அளித்தது. கோல்டன் குளோப் விருது விழாவில் நான் பாலிவுட் நடிகர் அனில் கபூர் அருகே அமர்ந்திருந்தேன். எனக்கு அந்நேரம் பார்த்து தாகமாக இருந்தது. நான் போய் ஸ்பிரைட் வாங்கி வருகிறேன் என்று கூறி அனில் கிளம்பினார். அனில் சென்று ஸ்பிரைட் வாங்கி வருவதற்குள் நான் விருதை பெற்றுவிட்டேன் என்றார் ரஹ்மான்.
அனில் கபூர்
இதற்காக நான் ரஹ்மானை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன். அவர் விருது வாங்குவதை பார்க்க ஆவலுடன் இருந்தேன். ஆனால் அவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருவதற்குள் விருதை வாங்கிவிட்டார் என்றார் அனில் கபூர்.