Don't Miss!
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Finance ஆக்சிஸ் வங்கி சிஇஓ-க்கு அடித்தது யோகம்.. அடுத்த 3 வருடத்திற்கு ராஜ வாழ்க்கை..!
- News ஒரே காரில் 4 ஆண்களுடன் இளம்பெண் பயணம்.. குமரி போலீஸ் கேட்ட கேள்வி.. கேரள இளைஞர்கள் கடும் வாக்குவாதம்
- Technology பொளக்குது விற்பனை.. பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. 108MP கேமரா.. 100W சார்ஜிங்.. 4500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா!
Recommended Video
சென்னை: பொள்ளாச்சி கொடூரம் தொடர்பாக கோபமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அறந்தாங்கி நிஷா.
பொள்ளாச்சியில் 200க்கும் அதிகமான பெண்களை மிரட்டி கும்பலொன்று பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புள்ள கொடூரன்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், காமெடி நடிகை அறந்தாங்கி நிஷாவும் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நிஷா வீடியோ:
‘நாங்க பொம்பளையா பொறந்துட்டோம். போராடி பார்ப்போம்' என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர், "இப்போதுதான் பெண்கள் அடுப்பறையை விட்டு வெளியே வந்து பள்ளி , கல்லூரி , வேலை என வெளிவுலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களை மீண்டும் அடுப்பங்கறைக்கே அனுப்பிவிடாதீர்கள்.
மீண்டும் கள்ளிப்பால்:
இது போன்று தொடர்ந்து பெண்களுக்கு அநீதிகள் நடந்துகொண்டே இருந்தால் முன்பை போலவே பெண்பிள்ளைகளை கள்ளிப்பால் ஊற்றி கொள்ளவேண்டிய காலம் திரும்பி விடும். ஏனென்றால் 10 , 15 வருடங்களுக்கு பிறகு எவனோ வந்து பெண்களை இப்படி நாசம் செய்வதற்கு பதிலாக நாமே கள்ளிப்பால் ஊற்றி கொன்றுவிடலாம் என்ற மனநிலைக்கு மக்கள் வந்து விடுவர்.
நீயெல்லாம் ஒரு தாயா?
குற்றவாளி ஒருவரின் தாய் அளித்த பேட்டியைப் பார்த்தேன். நீயெல்லாம் ஒரு தாயா..மூதேவி. செட்டப் செய்து அழுகின்ற குரலா அப்பெண்ணுடையது. பாதிப்பு, தவிப்பு, நம்பிக்கைத் துரோகம் என அந்தக் குரலில் உண்மையான பரிதவிப்பு உங்களுக்குத் தெரியவில்லையா?
இது தான் தீர்வு:
போராட்டங்கள் நடத்துவது இதற்கு தீர்வாகாது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக ஒன்று சேர்பவர்கள் தங்களது எதிர்ப்பை வரும் தேர்தலில் காட்ட வேண்டும். தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிக்க வேண்டும். அல்லது நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும்" என இவ்வாறு அவர் ஆவேசமாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.