Just In
- 26 min ago
சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய ரியா!
- 37 min ago
ஃபினாலேவுக்குள் முதல் ஆளாய் சென்று.. முதல் ஆளாய் எவிக்ட்டான சோம்.. டிவிஸ்ட் வைத்த முகேன்!
- 1 hr ago
பேசத் தயங்கிய அனிதா.. கமல் முன்பு மீண்டும் ஆட்டிட்யூட் காட்டிய அர்ச்சனா.. மத்தவங்க என்ன சொன்னாங்க!
- 1 hr ago
தமிழ்நாட்டுக்கே தாத்தாவாயிட்டேன் வின்னர விட பெரிய பரிசு கிடைச்சுது கமலிடம் நெகிழ்ந்த போட்டியாளர்கள்!
Don't Miss!
- News
குடியரசுத் தின கொண்டாட்டத்திற்கு சிறு பாதிப்பும் ஏற்படாது... அமைதியான முறையில் பேரணி -விவசாயிகள்
- Finance
வரியை குறைக்க வேண்டும்.. பட்ஜெட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு.. கைகொடுக்குமா பட்ஜெட் 2021..!
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் இவர்தான்.. செம டிவிஸ்ட் போங்க!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து விட்டது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் ரேகா முதல் வைல்டு கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்தார்.
வெளிவர காத்திருக்கும் வெப்சீரிஸ்.. புதிய ட்ரெண்டுக்கு மாறும் தமிழ் சினிமா!
அடுத்த சில வாரங்களில் வேல்முருகன் வெளியேற சச்சி வைல்டு கார்ட் என்றியாக உள்ளே நுழைந்தார். அதன்பிறகு சுரேஷ், சுச்சி, சம்யுக்தா, சனம் என வாரம் தோறும் ஒருவராக வெளியேறினர்.

டபுள் எவிக்ஷன்
இந்நிலையில் கடந்த வாரம் எதிர்பாரதவிதாமாக டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இரண்டாவது நாளாக ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற எவிக்ஷனில் நிஷா வெளியேற்றப்பட்டார்.

குறைந்த எண்ணிக்கை
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் எண்ணிக்கை 10ஆக குறைந்தது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் புராசஸில் ஆரி, அர்ச்சனா, ரியோ, அனிதா, சோம், ஆஜித், ஷிவானி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

டேஞ்சர் ஸோனில்
இவர்களில் அர்ச்சனா, சோம், ஆஜித் ஆகிய மூவரில் நிச்சயம் ஒருவர் வெளியேறுவது உறுதி என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். வாக்குகள் அடிப்படையில் ஆஜித்தும் அர்ச்சனாவும் டேஞ்சர் ஸோனில் இருப்பதாக கூறப்பட்டது.

வெளியேறப்போவது யார்?
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நாளைய எபிசோடு இன்றே காட்சியாக்கப்படும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நாளை வெளியேறப் போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சனா வெளியேற்றம்
அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டுள்ளதாக நம்ப தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற கேப்டன் டாஸ்க்கில் அர்ச்சனா வெற்றி பெற்றார்.

நிம்மதி பெருமூச்சு
இதனால் பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டனாக அர்ச்சனா தேர்வானார். இதனால் அடுத்தவாரம் நம்மை யாரும் நாமினேட் செய்ய முடியாது என ஆனந்த கண்ணீருடன் நிம்மதி பெருமூச்சு விட்டார் அர்ச்சனா.

இப்போ இல்லாட்டி எப்போவும் இல்ல
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா அடிக்கடி தகாத வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்தார். குறிப்பாக ஆரியை ரொம்பவே மோசமாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் இப்போது இல்லாவிட்டால் எபோதும் இல்லை என நினைத்த மக்கள் இந்த வாரம் அவரை அடித்து தூக்கிவிட்டனர்.