twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நரியா இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும்.. முட்டையை எடுத்த ஆரியை அசிங்கமாய் பேசிய அர்ச்சனா!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் முட்டையை தொட்ட ஆரியை அர்ச்சனா தரக்குறைவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது.

    முதல் நாள் டாஸ்க்கின் முதல் ரவுண்டில் கோழியாக இருந்த பாலாஜி, இரண்டாவது சுற்றில் தனது முட்டைய பாதுகாப்பதாக கூறி முட்டையின் மீது அமர்ந்து முட்டையை உடைத்தார் பாலாஜி.

    நிறைய சம்பவங்கள்

    நிறைய சம்பவங்கள்

    இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முட்டை டாஸ்க் தொடர்ந்தது. இதற்கான புரமோக்களே காலை முதல் பட்டையை கிளப்பின. அதனை பார்த்த ரசிகர்கள் இன்று நிறைய சம்பவங்கள் இருக்கு என கூறி வந்தனர்.

    ஆரியும் பாலாஜியும்

    ஆரியும் பாலாஜியும்

    இந்நிலையில் இன்றைய டாஸ்க்கின் முதல் ஷிவானி மற்றும் ரியோ கோழிகளாக இருந்தனர். அப்போது ரியோவின் முட்டையை ஆரியும் ஷிவானியின் முட்டையை பாலாஜியும் எடுத்தனர்.

    ஆரியிடம் வாக்குவாதம்

    ஆரியிடம் வாக்குவாதம்

    ஆனால் ரியோவின் முட்டையை அனிதாதான் முதலில் தொட்டதாக கூறி அனிதா ஆர்க்யூ செய்தார். அவருக்கு ஆதரவாய் அர்ச்சனா, ரம்யா ஆகியோரும் ஆரியிடம் வாக்குவாதம் செய்தனர்.

    அன்ஃபேர் கேம்

    அன்ஃபேர் கேம்

    தாங்கள் தான் டீலிங்கில் இருந்தோம், எதையுமே சொல்லாமல் ஆரி எப்படி வந்து முட்டையை தொடலாம் என கேட்டு பிரச்சனை செய்தனர். தொடர்ந்து ஆரி அன்ஃபேராக விளையாடுவதாக கூறினார் அனிதா.

    ஆட்டிட்யூட் காட்டிய ரம்யா

    ஆட்டிட்யூட் காட்டிய ரம்யா

    ரம்யாவும் அர்ச்சனாவும் வெரி ஃபேர் ஃபேர் என கைகளை தட்டி ஆரியை வெறுப்பேற்றினர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அர்ச்சனா, சோம், ரியோ, கேபி ஆகியோர்.

    மானம் இருக்கணும்

    மானம் இருக்கணும்

    அப்போது அங்கு வந்த ஆரியிடம் அர்ச்சனா, நாங்கதான் டீலிங் பேசி வச்சுருந்தோம். முதலில் அனிதா அடுத்து ரம்யா என்று நீங்கள் ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார். மேலும் நரியாய் இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும் என்றும் கூறினார்.

    மானம் ரோஷம் இல்லை

    மானம் ரோஷம் இல்லை

    இதனைக் கேட்ட ஆரி, கடுப்பாகி எனக்கு மானம் ரோஷமெல்லாம் இல்லை என்றார். ஆனால் அர்ச்சனா அதையெல்லாம் காதில் வாங்காமல் சாப்பிட்டப்படியே கேஷ்வலாஎ எழுந்து சென்றுவிட்டார்.

    வாடிக்கையாகிவிட்டது

    வாடிக்கையாகிவிட்டது

    அர்ச்சனா இப்படி பேசியதை பார்த்த ரசிகர்கள் இதற்கு கமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4ல் தரக்குறைவான வார்த்தைகளும் தகாத வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Archana scolded Aari for touching Rio's egg. She used disrespectful word on Aari.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X