Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நரியா இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும்.. முட்டையை எடுத்த ஆரியை அசிங்கமாய் பேசிய அர்ச்சனா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரியோவின் முட்டையை தொட்ட ஆரியை அர்ச்சனா தரக்குறைவாக பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக கோழிப்பண்ணை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களாக இந்த டாஸ்க் நடைபெற்று வருகிறது.
முதல் நாள் டாஸ்க்கின் முதல் ரவுண்டில் கோழியாக இருந்த பாலாஜி, இரண்டாவது சுற்றில் தனது முட்டைய பாதுகாப்பதாக கூறி முட்டையின் மீது அமர்ந்து முட்டையை உடைத்தார் பாலாஜி.
நிறைய சம்பவங்கள்
இந்நிலையில் இன்று இரண்டாவது நாளாக முட்டை டாஸ்க் தொடர்ந்தது. இதற்கான புரமோக்களே காலை முதல் பட்டையை கிளப்பின. அதனை பார்த்த ரசிகர்கள் இன்று நிறைய சம்பவங்கள் இருக்கு என கூறி வந்தனர்.
ஆரியும் பாலாஜியும்
இந்நிலையில் இன்றைய டாஸ்க்கின் முதல் ஷிவானி மற்றும் ரியோ கோழிகளாக இருந்தனர். அப்போது ரியோவின் முட்டையை ஆரியும் ஷிவானியின் முட்டையை பாலாஜியும் எடுத்தனர்.
ஆரியிடம் வாக்குவாதம்
ஆனால் ரியோவின் முட்டையை அனிதாதான் முதலில் தொட்டதாக கூறி அனிதா ஆர்க்யூ செய்தார். அவருக்கு ஆதரவாய் அர்ச்சனா, ரம்யா ஆகியோரும் ஆரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
அன்ஃபேர் கேம்
தாங்கள் தான் டீலிங்கில் இருந்தோம், எதையுமே சொல்லாமல் ஆரி எப்படி வந்து முட்டையை தொடலாம் என கேட்டு பிரச்சனை செய்தனர். தொடர்ந்து ஆரி அன்ஃபேராக விளையாடுவதாக கூறினார் அனிதா.
ஆட்டிட்யூட் காட்டிய ரம்யா
ரம்யாவும் அர்ச்சனாவும் வெரி ஃபேர் ஃபேர் என கைகளை தட்டி ஆரியை வெறுப்பேற்றினர். தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தனர் அர்ச்சனா, சோம், ரியோ, கேபி ஆகியோர்.
மானம் இருக்கணும்
அப்போது அங்கு வந்த ஆரியிடம் அர்ச்சனா, நாங்கதான் டீலிங் பேசி வச்சுருந்தோம். முதலில் அனிதா அடுத்து ரம்யா என்று நீங்கள் ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டார். மேலும் நரியாய் இருந்தாலும் மானஸ்தனா இருக்கணும் என்றும் கூறினார்.
மானம் ரோஷம் இல்லை
இதனைக் கேட்ட ஆரி, கடுப்பாகி எனக்கு மானம் ரோஷமெல்லாம் இல்லை என்றார். ஆனால் அர்ச்சனா அதையெல்லாம் காதில் வாங்காமல் சாப்பிட்டப்படியே கேஷ்வலாஎ எழுந்து சென்றுவிட்டார்.
வாடிக்கையாகிவிட்டது
அர்ச்சனா இப்படி பேசியதை பார்த்த ரசிகர்கள் இதற்கு கமல் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4ல் தரக்குறைவான வார்த்தைகளும் தகாத வார்த்தைகளும் பயன்படுத்தப்படுவது வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.