Just In
- 36 min ago
கொல மாஸ்.. சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் ‘குட்டி ஸ்டோரி’ பாடும் விஜய்.. வெளியானது வீடியோ பாடல்!
- 47 min ago
டைட்டான டிரஸ்ஸில் மெட்ராஸ் பட நடிகையின் அசத்தல் லுக்!
- 54 min ago
செவுத்துல பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சமந்தா கொடுத்த கலக்கலான கிறங்க வைக்கும் போஸ்!
- 1 hr ago
ஆக்ட்ரஸ் ரோஷினி கிட்ட பந்தா கிடையாது காஸ்டியும் டிசைனர் ப்ரீத்தியின் முதல் பேட்டி
Don't Miss!
- News
டெல்லியில் குடியரசு தினத்தில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு போலீஸ் அனுமதி
- Automobiles
அதிகரிக்கும் ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை!! 300வது ஷோரூமை இந்தியாவில் திறந்தது!
- Finance
அல்வா உடன் பட்ஜெட் கவுன்டவுன் துவங்கியது..!
- Sports
வேற வழியே இல்லை.. அந்த ஸ்ரேயாஸ் ஐயரை தூக்கிட்டு.. இந்த தம்பியை ஆட வைங்க.. ஆஸி. வீரர் அதிரடி!
- Lifestyle
எல்லோரும் விரும்பும் கூட்டாளராக நீங்க இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பார்ட் பார்ட்டா படம் எடுத்தும் பெரிய வெற்றி கிடைக்கலையே!
சென்னை: ஹாலிவுட், பாலிவுட் தொடங்கி தற்போது கோலிவுட்டிலும் பார்ட் 2 படங்கள் அதிக அளவில் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே வெற்றியடைந்த ஒரு படத்தின் தொடர்ச்சி எனும்போது, ரசிகர்களிடையே அது சற்று அதிக எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் எதிர்பார்ப்பு மட்டுமே படத்திற்கு வெற்றி தராது. அதே போல் அந்த எதிர்பார்ப்பு பொய்யாகும்போது அதுவே தோல்விக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. தமிழில் ஒரு படம் வெற்றியடைந்தால் அதே கருவில் அடுத்தடுத்து பல படங்கள் வருவது காலங்காலமாக நடந்து வரும் ஒன்று. அந்த வகையில் தமிழில் இப்போது பார்ட் 2 ட்ரெண்ட் போல. முனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான காஞ்சனா வும் வெற்றி பெற்றது.ஆனால் அதற்கடுத்து வெற்றி பெற்ற இரண்டாம் பாகத்தை கண்டுபிடிப்பது கடினம். இருப்பினும் பார்ட் 2 படங்களுக்கான மவுசு குறையவில்லை.

பொள்ளாச்சி கொடூரம்.. மூதேவி நீயெல்லாம் ஒரு தாயா..? ஆவேசமான அறந்தாங்கி நிஷா!
கடந்த 218-ல் தன அதிக அளவில் பார்ட் 2 படங்கள் வெளியாகின.2.0, விஸ்வரூபம் 2, மாரி 2, கலகலப்பு 2, தமிழ்ப்படம் 2, சண்டக்கோழி 2, சாமி ஸ்கொயர் என ஏகப்பட்ட படங்கள். இவற்றில் சாமி சண்டக்கோழி படங்கள் வெளியாகி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகின்றன. இவை அனைத்துமே முதல் பாகத்தை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான வரவேற்பையே பெற்றுள்ளன.

இதுபோக அடுத்து தேவி 2, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ள. இதுபோக புதுப்பேட்டை 2, ஆயிரத்தில் ஒருவன் 2, கொடி 2, நாடோடிகள் 2, மங்காத்தா 2, துப்பாக்கி 2 என பல படங்களின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுகளை அந்தந்த படங்களின் இயக்குனர்கள் அவ்வப்போது பேசுகின்றனர். இது அனைத்தும் சாத்தியமா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியும் .

ஹாலிவுட்டில் 6,7 பக்கங்கள் வெற்றிகரமாக எடுக்கும்போது நம்ம ஊரில் 2-ம் பாகத்திற்கே பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. பாகுபலி , வடசென்னை போன்ற படங்களின் கதையை 2 மணி நேரத்திற்குள் சுருக்க முடியாது என படம் வெளியாகும் ஆரம்பிக்கும்போதே ஒன்றிற்கும் மேற்பட்ட பாகங்கள் வெளியாகும் என இயக்குனர்கள் தெரிவித்திருந்தனர். எனவே, கதை அமைப்பிறகு தேவை இல்லாத பட்சத்தில், முதல் பாகத்தின் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, அதே போன்று இரண்டாம் பாகம் எடுக்க நினைத்தால் அது முதல் படத்தையும் சேர்த்தே பாதிக்கும் என்பது 2018-ல் வெளியான பார்ட் 2 படங்களின் நிலையை பார்த்தாலே தெரிகிறது .