Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தால் காப்பாற்றப்பட்டேனா?: ஸ்டண்ட் சில்வா
சென்னை: தான் பல்கேரியாவில் கைது செய்யப்பட்டு அஜீத்தின் உதவியால் நாடு திரும்பவில்லை என ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா தெரிவித்துள்ளார்.
சிறுத்தை சிவா அஜீத்தை வைத்து இயக்கி வரும் தல 57 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா. தல 57 படக்குழு தற்போது பல்கேரியாவில் உள்ளது. இந்நிலையில் சில்வா மட்டும் நாடு திரும்பியுள்ளார்.
அவர் ரஜினியின் 2.0 படத்தில் வேலை செய்ய நாடு திரும்பியுள்ளார்.

கைது
பல்கேரியாவில் சில்வா அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டார் என்றும், அஜீத் தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் அவரை வெளியே கொண்டு வந்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சில்வா
பல்கேரியாவில் கைது செய்யப்பட்டீர்களா என்று சில்வாவிடம் கேட்டால் சிரிப்பாய் சிரிக்கிறார். என்னை யாரும் கைது செய்யவில்லை, 2.0 பட வேலைக்காக நாடு திரும்பினேன் என்கிறார் சில்வா.

அஜீத்
ரஜினி சார் பட வேலை இருக்கிறது அதனால் ஊருக்கு போகிறேன் என அஜீத் சாரிடம் தெரிவித்துவிட்டு தான் வந்தேன். நான் கைது செய்யபட்டேன் என யார் வதந்தியை கிளப்பிவிட்டது என தெரியவில்லை. இதை கேட்டால் அஜீத்தே சிரிப்பார் என சில்வா தெரிவித்தார்.

வதந்தி
நான் ரஜினி சாருக்காக ஊருக்கு வந்தால் இங்கு என்னைப் பற்றி என்னென்னவோ பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இப்படி வதந்தியை பரப்புகிறார்களோ என்று சில்வா கூறுகிறார்.