Don't Miss!
- Sports சிஎஸ்கே இம்முறை கோப்பையை மறந்திட வேண்டியது தான்.. 19 பந்தில் 16 ரன்கள்.. ஜடேஜா ஆடிய டெஸ்ட் இன்னிங்ஸ்
- Finance மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுக்கு மீண்டும் ஒரு தலைவலி..!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- News ஃபுட் பாய்ஸன் காரணமாக திடீரென டெல்லி திரும்பிய ராகுல் காந்தி.. இன்று மீண்டும் பிரச்சாரம் தொடக்கம்!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர்கள் கரையான்கள், எங்கள் பேச்சைக் கேட்காதீங்க: நடிகர் நானா படேகர்
மும்பை: நாங்கள் நடிகர்கள் எல்லாம் கரையான்கள், மக்கள் எங்கள் பேச்சிற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிக்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாராஷ்டிரா நவநிர்மன் சேனாவின் மிரட்டலுக்கு பயந்து மும்பையில் இருந்த பாகிஸ்தான் கலைஞர்கள் நாடு திரும்பிவிட்டனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என சல்மான் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து பாலிவுட் நடிகர் நானா படேகர் கூறுகையில்,
பாகிஸ்தான் கலைஞர்கள்
பாகிஸ்தான் கலைஞர்கள் முக்கியம் இல்லை. நமக்கு நம் நாடு தான் முக்கியம். எனக்கு என் நாட்டை தவிர வேறு எதுவும் தெரியாது. தேசத்துடன் ஒப்பிடுகையில் நாங்கள் கலைஞர்கள் எல்லாம் வெறும் கரையான்கள்.
நடிகர்கள்
நடிகர், நடிகைகள் எல்லாம் முக்கியத்துவம் இல்லாதவர்கள். நாடு தான் முக்கியம். நான் இரண்டரை ஆண்டுகள் இந்திய ராணுவத்தில் இருந்திருக்கிறேன்.
ராணுவ வீரர்கள்
ராணுவத்தில் இருந்ததால் எல்லையில் போராடும் நம் ஜவான்கள் தான் உண்மையான ஹீரோக்கள் என்பது எனக்கு தெரியும். உலகின் பெரிய ஹீரோக்கள் நம் ராணுவ வீரர்கள்.
மக்கள்
நாங்கள் நடிகர்கள் ஒன்றும் உண்மையான ஹீரோக்கள் கிடையாது. மக்கள் நடிகர்களாகிய நாங்கள் சொல்வதற்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது. எங்களை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
கேட்கக் கூடாது
பாகிஸ்தான் கலைஞர்கள் பற்றி நடிகர்கள் கூறுவதை கேட்பதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். நடிகர்களுக்கு எல்லாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். அது தேவையே இல்லை.