அருண் விஜய், பாரதிராஜா வாக்களித்தனர்; 92 வயது அம்மாவுடன் வந்து வாக்களித்த எஸ்வி சேகர்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் மந்தமான முறையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
நடிகர்கள் மட்டுமின்றி சென்னையில் உள்ள பொதுமக்களும் வாக்களிக்க முனைப்பு காட்டவில்லை என தெளிவாக தெரிகிறது.
இந்நிலையில், சில முன்னணி திரைபிரபலங்கள் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை பொறுப்புடன் ஆற்றி உள்ளனர். அதுகுறித்து இங்கே பார்ப்போம்..

அருண் விஜய் வாக்களித்தார்
விரைவில் யானை படம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ள நடிகர் அருண் விஜய் 13 மண்டலம் ,168 வது வார்டில் தனது வாக்கினை செலுத்தினார். நடிகர் அருண் விஜய் ஓட்டுப் போட்டு வெளியே வந்த நிலையில், எடுக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அரைடஜன் படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரதிராஜா வாக்களித்தார்
காலை முதலே நடிகர் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை மறக்காமல் ஆற்றிய நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் 80 வயதை நெருங்கும் பாரதிராஜா திநகரில் உள்ள இந்தி பிரசார சபை வாக்கு மையத்திற்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

எஸ்வி சேகர்
சென்னையில் வாக்குப் பதிவு மிகவும் மந்தமான நிலையில், நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தேர்தல் ஆணையம் சென்னை மக்கள் வாக்கு மையங்களுக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகரும் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் மந்தவெளிப்பாக்கம் 126 வார்டு செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
Recommended Video

92 வயது தாயாருடன்
ஒரு பக்கம் கொரோனா பரவல் உள்ளிட்ட அச்சம் காரணமாக பொதுமக்களும் பிரபலங்களும் வாக்கு செலுத்துவதை தவிர்த்து வரும் நிலையில், எஸ்வி சேகர் தனது 92 வயது தாயாரை சக்கர நாற்காலியில் அழைத்து வந்து வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. பொதுமக்கள் முகக் கவசம் அணிந்து கொண்டு பாதுகாப்பான முறையில் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வாக்களித்து வரும் பலரும் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











