கவுதம் மேனனுக்கு அரவிந்த்சாமி பதிலடி: இதுக்கு பெயர் தான் டீசன்டா கழுவி ஊத்துவதோ?
Recommended Video

சென்னை: இயக்குனர் கவுதம் மேனனை குத்திக்காட்டி ட்வீட் போட்டுள்ளார் நடிகர் அரவிந்த்சாமி.
கவுதம் மேனன் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நரகாசூரன். இந்நிலையில் கவுதம் தங்களை குப்பையை போன்று நடத்தியதாக கார்த்திக் நரேன் குற்றம் சாட்டியுள்ளார்.
தங்களை போன்று இனி யாரையும் ஏமாற்ற வேண்டாம் என்று கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

விளக்கம்
கார்த்திக்கிற்கும், தனக்கும் இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது என்று கவுதம் மேனன் தெரிவித்துள்ளார். மேலும் படத்தில் இருந்து விலகச் சொன்னால் வெளியேற தயார் என்றும் கூறியுள்ளார்.
கோபம்
கவுதம் மேனன் கார்த்திக் நரேனை தாக்கி போட்ட ட்வீட்டை பார்த்து அரவிந்த்சாமி கோபம் அடைந்துள்ளார். கவுதம் பல படங்களை துவங்கி முடிக்காமல் உள்ளதை குத்திக்காட்டி ட்வீட்டியுள்ளார்.

பாராட்டு
கவுதம் மேனனை இதை விட நாசுக்காக வேறு யாராலும் கழுவி ஊத்த முடியாது சார் என்று அரவிந்த்சாமியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பணம்
முழு சம்பளத்தையும் கொடுத்தால் தான் டப்பிங் பேசுவேன் என்று அரவிந்த்சாமி கூறியதையும் கவுதம் தனது ட்வீட்டில் தெரிவித்திருக்கிறார். அவருக்கு சம்பள பாக்கி விரைவில் அளிக்கப்படும் என்று கவுதம் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











