அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது தெரியுமா லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை : இயக்குனர் அட்லி விஜய்யை வைத்து அடுத்த அடுத்து மூன்று பிளாக்பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.
நான்காவதாக மீண்டும் விஜய்யை வைத்து படம் இருக்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தை இயக்க தயாராகி வருகிறார்.
முதற்கட்ட பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு எப்போது என்பது பற்றிய புதிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.

முன்னணி இயக்குனர் பட்டியலில்
விஜய்யின் தீவிர ரசிகரான அட்லி விஜய்யை வைத்து தெறி,மெர்சல், பிகில் என மூன்று ஹிட் படங்களை கொடுத்து இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய சினிமாக்களை இயக்குவதில் இவர் கில்லி.

போட்டோ ஷூட்
நான்காவதாக மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்க இருப்பதாக சொல்லப்படும் நிலையில் இப்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதற்காக ஷாருக் கானை வைத்து புதிய போட்டோ ஷூட் ஒன்றையும் படக்குழு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது என்ற தகவல் வெளியாகியிருந்தது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக
பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதால் இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்போது அது உறுதியாகி உள்ளது. ஷாருக் கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

மும்பையில்
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் இந்த தகவல் தற்போது கிடைத்துள்ளது அதன்படி வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்.


Click it and Unblock the Notifications











