Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகுபலி 2: கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கு மட்டும் 10 வாரங்களை ஒதுக்கிய ராஜமௌலி!
ஹைதராபாத்: பாகுபலி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் 10 வாரங்களை படக்குழு ஒதுக்கியிருப்பதாக கூறப்படுகிறது.
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் பாகுபலி. தற்போது இப்படத்தின் 2 வது பாகத்தினை ராஜமௌலி இயக்கி வருகிறார்.
முதல் பாகத்தை ராஜமௌலி ட்விஸ்ட்டுடன் முடித்திருந்ததால் 2 வது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை வருகின்ற 13ம் முதல் எடுக்கவிருப்பதாக ராஜமௌலி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் ''கோடை விடுமுறைக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பிற்கு வந்துள்ளோம்.
பாகுபலி 2 கிளைமாக்ஸ் பகுதிக்கு 10 வாரங்களை ஒதுக்கியுள்ளோம். உண்மையில் இது சவாலானது தான்.ஜூன் 13ம் தேதி பாகுபலி 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடிக்கவுள்ளோம்'' என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் ஹைதராபாத்தில் உள்ள ராஜமௌலி பிலிம் சிட்டியில் படம்பிடிக்கப்படவுள்ளன. சாபு சிரில் மேற்பார்வையில் இதற்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ராணா ஆகியோர் படத்தின் கிளைமாக்ஸ் பகுதியில் பங்கு பெறுகின்றனர்.இதற்காக அனைவரின் கால்ஷீட்களையும் ராஜமௌலி மொத்தமாக வாங்கியிருக்கிறாராம்.
கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்? போன்ற பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளுக்கான விடைகள் இந்தப் பாகத்தில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அபரிமிதமாக உள்ளது.