பாகுபலி 2: திருட்டுத்தனமாக வெளியான தீம் சாங்... ஜெட் வேகத்தில் வைரலாகிறது
சென்னை: பாகுபலி படத்தின் முதல் பாகம் வந்து உலகமெங்கும் வசூல் மழையில் நனைந்து கொண்டிருக்கின்றது, இந்த வெற்றியை பாகுபலி குழுவினர் கொண்டாடி மகிழ்ந்திருக்கும் இவ்வேளையில் அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது.
பாகுபலி படத்தின் 2 ம் பாகத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் படத்தின் தீம் சாங் தற்போது இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
மிகவும் ரகசியமாக வைத்திருந்த பாடல் எப்படிக் கசிந்தது என்று படப்பிடிப்புக் குழுவினர் அதிர்சிக்கு உள்ளாகியுள்ளனர், திருட்டுத்தனமாக வெளியான இந்த தீம் சாங் தற்போது இணையத்தில் ஜெட் வேகத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
2016 ம் ஆண்டில் திரையைத் தொடவிருக்கும் பாகுபலி படத்தின் 2 ம் பாகத்திற்கான படப்பிடிப்பு 40% நிறைவு, பெற்றுள்ள நிலையில் 2 ம் பாகத்திற்கான அடுத்தக் கட்ட படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











