Don't Miss!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
'மகிழ்மதி' போல உருவாகும் ஆந்திர தலைநகர் - ஐடியா கொடுக்கும் 'பாகுபலி' ஆர்க்கிடெக்ட்!
ஐதராபாத் : மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆந்திர மாநிலம், தெலுங்கானா, ஆந்திரா என இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது.
தற்போது இரண்டு மாநிலங்களின் தலைநகராக ஐதராபாத் உள்ளது. பத்து வருடங்களுக்குப் பிறகு ஐதராபாத் தெலுங்கானாவின் தலைநகராக மட்டுமே செயல்படும்.
ஆந்திராவின் தலைநகராக பத்து ஆண்டுகள் கழித்து செயல்பட அமராவதி நகரம் தேர்வு செய்யப்பட்டது. அந்த நகரைப் புதிதாக நிர்மாணிப்பதற்கு சுமார் ரூ. 58,000 கோடி செலவிடப்பட உள்ளது.
அமராவதி நகர டிசைன் :
அமராவதி நகர நிர்மாணத்திற்காக லண்டனைச் சேர்ந்த என்ஜினியர் ஒருவர் நகர டிசைனை உருவாக்கி வருகிறார். ஆனால், அந்த டிசைனில் சில மாற்றங்களைச் செய்ய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளார்.
ராஜமௌலியிடம் ஐடியா :
அந்த டிசைன் எப்படி வரலாம் என்பதற்கான மாற்றங்கள் குறித்து ஆலோசனை வழங்க பிரபல திரைப்பட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியை லண்டனுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார் சந்திரபாபு நாயுடு.
மகிழ்மதி நகரம் போல :
அனைத்து வசதிகளும் உள்ள எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அந்த நகரம் உருவாக உள்ளது. 'பாகுபலி' படத்தில் மகிழ்மதி பேரரசை ராஜமௌலி கற்பனையாக பிரமாண்டமாக உருவாக்கியதைப் பார்த்தே சந்திரபாபு நாயுடு அவருக்கு இந்தப் பொறுப்பை வழங்கியுள்ளார்.
செலவுகளை அரசே ஏற்கும் :
இதற்காக லண்டன் செல்லும் ராஜமௌலியின் மொத்த செலவையும் ஆந்திர அரசே ஏற்க உள்ளதாம். தன்னுடைய இந்தப் பணிக்காக ராஜமௌலி எந்தவிதமான கட்டணத்தையும் அரசிடம் கேட்கப் போவதில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. ஆந்திர மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கொவ்வூர் என்ற ஊர் தான் ராஜமௌலியின் சொந்த ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!